பதிவு செய்த நாள்
12 ஆக2013
10:19
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(ஆகஸ்ட் 12ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில்(9.30 மணியளவில்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.60.57-ஆக காணப்பட்டது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூ.60.88-ஆக முடிந்து இருந்தது ரூபாயின் மதிப்பு.
ரூபாயின் மதிப்பில் தொடரும் சரிவை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளியன்று, ஒவ்வொரு திங்கட்கிழமையும் அரசுதுறை பத்திரங்களை ரூ.22 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யும் என்று அறிவித்ததில் இருந்து ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுவதாகவும், நாட்டின் பிற வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|