பதிவு செய்த நாள்
12 ஆக2013
00:22
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5சதவீதத்திற்கும் கீழ் குறையும் என,பேங்க் ஆப் அமெரிக்கா - மெரில் லின்ஞ் மதிப்பிட்டுள்ளது.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்புசரிவடைவதை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைமேற்கொண்டது.
இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 4.8சதவீதம் என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5சதவீதமாகசரிவடைந்தது.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மற்றும் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டு காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அதேசமயம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பொருளாதார வளர்ச்சிசற்று உயர்ந்து இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|