பதிவு செய்த நாள்
13 ஆக2013
14:38
மும்பை : ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது தங்கம் மீதான இறக்குமதி 8 சதவீதமாக உள்ள நிலையில் இதனை 2 சதவீதம் அதிகரித்து 10 சதவீதமாக்கியுள்ளது.
தங்கம் தவிர்த்து வெள்ளி மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 6சதவீதமாக உள்ள இறக்குமதி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேப்போல் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் இறக்குமதி வரி அதிகரிப்பால் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|