அன்னிய செலாவணி கையிருப்பு 27,860 கோடி டாலராக அதிகரிப்புஅன்னிய செலாவணி கையிருப்பு 27,860 கோடி டாலராக அதிகரிப்பு ... நிறுவனங்களின் இணைத்தல்நடவடிக்கை 150கோடி டாலர் நிறுவனங்களின் இணைத்தல்நடவடிக்கை 150கோடி டாலர் ...
சாகுபடி பரப்பளவு 9.30கோடி ஹெக்டேராக வளர்ச்சி:கூடுதல் மழை பொழிவால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
03:39

புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில் (ஜூன் - செப்.,), ஆகஸ்ட் 16ம்தேதி வரையில், நாடு முழுவதும் கூடுதலாக மழை பொழிந்து உள்ளதை அடுத்து, உணவு தானியங்களின் சாகுபடி பரப்பளவு, 9.30கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின், இதே காலத்தில், 8.53கோடி ஹெக்டேராக இருந்தது.வேளாண் அமைச்சகம்
இதுகுறித்து, மத்தியவேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜூன் 1ம்தேதி முதல், ஆகஸ்ட் 16ம்தேதி வரையில், நாடு தழுவிய அளவில், கூடுதலாக, 13 சதவீதம் மழை பொழிந்துள்ளது.நாட்டின், 36 வானிலை ஆ#வு மையங்களின் அறிக்கையில், 31 மையங்களில், கூடுதலாக அல்லது வழக்கமான மழைப் பொழிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகளில், மழை பற்றாக்குறையாக உள்ளது.
இதில், வடமேற்கு பிராந்தியங் களின் பங்களிப்பு, 27 சதவீதமாகவும், மத்திய இந்தியாவின் பங்களிப்பு, 34 சதவீதமாகவும் உள்ளது. தெற்கு தீபகற்பத்தில், 23 சதவீதம் மழை பெ#துள்ளது. அதே சமயம், கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில், மழை பொழிவு, 21 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது.மக்காச்சோளம் :இருந்தபோதிலும், ஒட்டுமொத்த அளவில் மழை பொழிவு, வழக்கத்தை விட அதிகம் என்பதால், விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிர் செ#து வருகின்றனர்.
குறிப்பாக,சோயா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் பரப்பளவு, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.வழக்கமாக, கரீப் பருவத்தில், 1,068 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பயிரிடப்படும். இதில், நடப்பு ஆகஸ்ட் 16ம்தேதி நிலவரப்படி, 85 சதவீத நடவுப் பணிகள் முடிவடைந்து விட்டன. நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 4 சதவீதம் அதிகரித்து, 304.62 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து உள்ளது.உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்,மேற்கு வங்கம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களிலும், அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அதே சமயம், ஆந்திரா, பீகார் மற்றும் ஒடிசாவில், நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.
பருப்பு வகைகளின் பயிரிடும் பரப்பளவு, சென்ற ஆண்டின், இதே காலத்தில் காணப்பட்டதை விட, 25 சதவீதம் அதிகரித்து, 93.25 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், துவரம் பருப்பு பயிரிடும் பரப்பளவு, 31.04 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 35.76 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. உளுந்தம் பருப்பு பயிரிடும் பரப்பளவு, 19.51 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 20.76 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. கடலைப் பருப்பு சாகுபடி பரப்பளவு, 43 சதவீதம் உயர்ந்து, 14.42 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 20.68 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.கரும்பு:தானியங்களில், மக்காச்சோளம், இதுவரை இல்லாத சாதனையாக, 79.06 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 69.45 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
இதே காலத்தில், கம்பு பயிரிடும் பரப்பளவு,53.91 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 68.81 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில்,சோளம் பயிரிடும் பரப்பளவு, 22.98 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 20.33 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.கர்நாடகா, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில், தானிய வகைகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளன. குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், தானியங்கள் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.
எண்ணெய்வித்துக்கள்:எண்ணெய்வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மக்காச்சோளம் பயிரிடப் பட்டுள்ள பரப்பளவு, 106.41 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 121.31 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டிஉள்ளது.
இதேபோன்று, நிலக்கடலை பயிரிடும் பரப்பளவும், 34.35 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 39.96 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், எண்ணெய்வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, அதிகரித்து உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பணப் பயிர்களான, பருத்தி மற்றும் கரும்பு பயிரிடும் பரப்பளவு, முறையே, 48.53 லட்சம் ஹெக்டேர் (40.06 லட்சம் ஹெக்டேர்) மற்றும் 110.93 லட்சம் ஹெக்டேர் (110.26 லட்சம் ஹெக்டேர்) என்ற அளவில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)