பதிவு செய்த நாள்
19 ஆக2013
03:39
புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில் (ஜூன் - செப்.,), ஆகஸ்ட் 16ம்தேதி வரையில், நாடு முழுவதும் கூடுதலாக மழை பொழிந்து உள்ளதை அடுத்து, உணவு தானியங்களின் சாகுபடி பரப்பளவு, 9.30கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின், இதே காலத்தில், 8.53கோடி ஹெக்டேராக இருந்தது.வேளாண் அமைச்சகம்
இதுகுறித்து, மத்தியவேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜூன் 1ம்தேதி முதல், ஆகஸ்ட் 16ம்தேதி வரையில், நாடு தழுவிய அளவில், கூடுதலாக, 13 சதவீதம் மழை பொழிந்துள்ளது.நாட்டின், 36 வானிலை ஆ#வு மையங்களின் அறிக்கையில், 31 மையங்களில், கூடுதலாக அல்லது வழக்கமான மழைப் பொழிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகளில், மழை பற்றாக்குறையாக உள்ளது.
இதில், வடமேற்கு பிராந்தியங் களின் பங்களிப்பு, 27 சதவீதமாகவும், மத்திய இந்தியாவின் பங்களிப்பு, 34 சதவீதமாகவும் உள்ளது. தெற்கு தீபகற்பத்தில், 23 சதவீதம் மழை பெ#துள்ளது. அதே சமயம், கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில், மழை பொழிவு, 21 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது.மக்காச்சோளம் :இருந்தபோதிலும், ஒட்டுமொத்த அளவில் மழை பொழிவு, வழக்கத்தை விட அதிகம் என்பதால், விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிர் செ#து வருகின்றனர்.
குறிப்பாக,சோயா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் பரப்பளவு, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.வழக்கமாக, கரீப் பருவத்தில், 1,068 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பயிரிடப்படும். இதில், நடப்பு ஆகஸ்ட் 16ம்தேதி நிலவரப்படி, 85 சதவீத நடவுப் பணிகள் முடிவடைந்து விட்டன. நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 4 சதவீதம் அதிகரித்து, 304.62 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து உள்ளது.உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்,மேற்கு வங்கம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களிலும், அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அதே சமயம், ஆந்திரா, பீகார் மற்றும் ஒடிசாவில், நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.
பருப்பு வகைகளின் பயிரிடும் பரப்பளவு, சென்ற ஆண்டின், இதே காலத்தில் காணப்பட்டதை விட, 25 சதவீதம் அதிகரித்து, 93.25 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், துவரம் பருப்பு பயிரிடும் பரப்பளவு, 31.04 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 35.76 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. உளுந்தம் பருப்பு பயிரிடும் பரப்பளவு, 19.51 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 20.76 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. கடலைப் பருப்பு சாகுபடி பரப்பளவு, 43 சதவீதம் உயர்ந்து, 14.42 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 20.68 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.கரும்பு:தானியங்களில், மக்காச்சோளம், இதுவரை இல்லாத சாதனையாக, 79.06 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 69.45 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
இதே காலத்தில், கம்பு பயிரிடும் பரப்பளவு,53.91 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 68.81 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில்,சோளம் பயிரிடும் பரப்பளவு, 22.98 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 20.33 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.கர்நாடகா, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில், தானிய வகைகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளன. குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், தானியங்கள் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.
எண்ணெய்வித்துக்கள்:எண்ணெய்வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மக்காச்சோளம் பயிரிடப் பட்டுள்ள பரப்பளவு, 106.41 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 121.31 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டிஉள்ளது.
இதேபோன்று, நிலக்கடலை பயிரிடும் பரப்பளவும், 34.35 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 39.96 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், எண்ணெய்வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, அதிகரித்து உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பணப் பயிர்களான, பருத்தி மற்றும் கரும்பு பயிரிடும் பரப்பளவு, முறையே, 48.53 லட்சம் ஹெக்டேர் (40.06 லட்சம் ஹெக்டேர்) மற்றும் 110.93 லட்சம் ஹெக்டேர் (110.26 லட்சம் ஹெக்டேர்) என்ற அளவில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|