பதிவு செய்த நாள்
22 ஆக2013
01:41
புதுடில்லி:ரூபாய்மதிப்பின்சரிவைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு,சர்வதேச நிதியத்திடம், 200 டன் தங்கத்தை அடமானம் வைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2,300 கோடி டாலர் திரட்டப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இத்தொகையைக் கொண்டு, ரூபாய்மதிப்பின் வீழ்ச்சியை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய அரசு, முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
கடந்த 2009ம் ஆண்டு, மத்திய அரசு,சர்வதேச நிதியத்திடம், 670 கோடி டாலர் ரொக்கத்திற்கு, 200 டன் தங்கம் வாங்கியது.சர்வதேச நிதியத்திடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தங்கம், ஆவண வடிவிலேயே அடமானம் வைக்கப்பட்டு, டாலர் பெறப்படும் என, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 1991ம் ஆண்டு, வளைகுடா போரினால், இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்தது. அப்போது, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெறும், 120 கோடி டாலரே இருந்தது.
இதை ஈடுசெய்யும் வகையில் அப்போதைய பாதுகாப்பு அரசு, கையிருப்பில் இருந்த, 67 டன் தங்கத்தை அடமானம் வைத்து, 230 கோடி டாலரை பெற்றது. தற்போது, 27,860 கோடி டாலர் அன்னிய செலவாணி கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|