பதிவு செய்த நாள்
24 ஆக2013
01:06
மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், அதன் அடிப்படை வட்டி விகிதத்தை, 9.75 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, இவ்வங்கி தெரிவித்து உள்ளது.ரிசர்வ் வங்கி, உள்நாட்டில் பணப்புழக்கத்தை குறைத்து, ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்து நிறுத்தும் வகையில், சென்ற ஜூலை, 15ம்தேதி, வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது.இதனால், வங்கிகளின் வட்டிச் செலவினம் உயர்ந்து உள்ளது. இதை ஈடு செய்யும் வகையில், எச்.டீ.எப்.சி பேங்க், ஆக்சிஸ் பேங்க், கோட்டக் மகிந்திரா பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகியவை, அவற்றின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.அடிப்படை வட்டி விகிதத்திற்கும் கீழ், எந்த ஒரு வங்கியும், வழங்கும் கடனுக்கான வட்டியை குறைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|