பதிவு செய்த நாள்
26 ஆக2013
05:22
குன்னூர்:பல மாநிலங்களில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னைகளால், குன்னூரில், தேயிலை வர்த்தகம் ”ணக்கம் கண்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் ஏல மையத்தில் நடந்த, 33வது, ஏலத்தில், 9.14 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனையானது. சராசரியாக, கிலோவுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 85.13 ரூபாய்க்கு விற்பனையானது; இதன் மூலம், 7.78 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.கடந்த வார ஏலத்தில், 12.88 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது. சராசரியாக, 1 கிலோவுக்கு, 84.79 ரூபாய் விலை கிடைத்தது.
இதன் மூலம், 10.72 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.ஆக, கடந்த வாரத்தை விட, 3.14 கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது.சில வாரங்களாக, குன்னூரில் உள்ள, அரசு மற்றும் தனியார் ஏல மையங்களில், தேயிலை தூள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
கேரள மாநிலத்தில், "சோலார் பேனல்' மோசடி தொடர்பான போராட்டம், ஆந்திராவில், தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம், பீகார், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள, போராட்டங்களால், அசாதாரண சூழல் நிலவி வருகிறது.இதனால், பிற மாநிலங்களுக்கான, சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும், 1 கிலோ தேயிலை தூளை, 95 ரூபாய் முதல் 105 ரூபாய் வரை, வாங்கி வந்த பாகிஸ்தான் வர்த்தகர்கள், எல்லையில் தொடரும் மோதல் காரணமாக, கொள்முதலை நிறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளான, எகிப்து, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் தொடரும் அரசியல் போராட்டங்களாலும், குன்னூர் தேயிலை ஏல மையங்களில், தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை தூள் தேக்கம்அடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|