சிகிச்சை செலவு குறைந்துள்ளதால் இந்தியாவில் குவியும் மருத்துவ சுற்றுலா பயணிகள்சிகிச்சை செலவு குறைந்துள்ளதால் இந்தியாவில் குவியும் மருத்துவ சுற்றுலா ... ... புதிய எரிவாயு வளம்ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு புதிய எரிவாயு வளம்ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு ...
சர்வதேச அரசியல் பிரச்னைகளால்குன்னூரில் தேயிலை வர்த்தகம் சுணக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
05:22

குன்னூர்:பல மாநிலங்களில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னைகளால், குன்னூரில், தேயிலை வர்த்தகம் ”ணக்கம் கண்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் ஏல மையத்தில் நடந்த, 33வது, ஏலத்தில், 9.14 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனையானது. சராசரியாக, கிலோவுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 85.13 ரூபாய்க்கு விற்பனையானது; இதன் மூலம், 7.78 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.கடந்த வார ஏலத்தில், 12.88 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது. சராசரியாக, 1 கிலோவுக்கு, 84.79 ரூபாய் விலை கிடைத்தது.
இதன் மூலம், 10.72 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.ஆக, கடந்த வாரத்தை விட, 3.14 கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது.சில வாரங்களாக, குன்னூரில் உள்ள, அரசு மற்றும் தனியார் ஏல மையங்களில், தேயிலை தூள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
கேரள மாநிலத்தில், "சோலார் பேனல்' மோசடி தொடர்பான போராட்டம், ஆந்திராவில், தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம், பீகார், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள, போராட்டங்களால், அசாதாரண சூழல் நிலவி வருகிறது.இதனால், பிற மாநிலங்களுக்கான, சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும், 1 கிலோ தேயிலை தூளை, 95 ரூபாய் முதல் 105 ரூபாய் வரை, வாங்கி வந்த பாகிஸ்தான் வர்த்தகர்கள், எல்லையில் தொடரும் மோதல் காரணமாக, கொள்முதலை நிறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளான, எகிப்து, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் தொடரும் அரசியல் போராட்டங்களாலும், குன்னூர் தேயிலை ஏல மையங்களில், தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை தூள் தேக்கம்அடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)