பதிவு செய்த நாள்
26 ஆக2013
18:18
சென்ற ஜனவரி மாதம், சாம்சங் நிறுவனம் தன்னுடைய கிராண்ட் காலக்ஸி டூயோஸ் என்ற மாடல் மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போது வெள்ளை மற்றும் மெட்டாலிக் புளு ஆகிய வண்ணங்களில் மட்டும் வெளியானது. தற்போது ஒயின் சிகப்பு மற்றும் பிரவுண் கலர்களிலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. ரூ.19,900 செலுத்தி இந்த மாடல் போனை வாங்குவோருக்கு, போனுக்கான பிளிப் கவர் இலவசமாகக் கிடைக்கிறது. ரூ.20,800 செலுத்தி வாங்குவோருக்கு, இன்னொரு பிளிப் கவர் என இரண்டு கவர் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த மாடல் போனில், 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. ஆட்டோ போகஸ் கேமரா, 2 எம்.பி. முன்புறக் கேமரா, 1 ஜிபி ராம் மெமரி, 64 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 2,100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|