பதிவு செய்த நாள்
27 ஆக2013
04:23
புதுடில்லி:தனியார் துறையை சேர்ந்த, ஐந்து விமான நிறுவனங்களிடம் இருந்து, 357 கோடி ரூபாய் நிலுவையை வ‹லிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்து ஆணையம் (ஏ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.கிங்பிஷர்:சென்ற மார்ச் மாத நிலவரப்படி, கிங்பிஷர் ஏர்-லைன்ஸ்,ஜெட் ஏர்-லைன்ஸ்,ஜெட்லைட் ஏர்-லைன்ஸ் உள்ளிட்ட, ஐந்து விமானச் சேவை நிறுவனங்கள், இந்திய விமான போக்குவரத்து ஆணையகத்திற்கு, 357.39 கோடி ரூபாய் பாக்கி வைத்து உள்ளன.
இதில், கிங்பிஷர் ஏர்-லைன்ஸ் நிறுவனம் மட்டும் செலுத்த வேண்டிய தொகை, மிகவும் அதிகபட்சமாக, 175.30 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இதையடுத்து, ஜெட் ஏர்-லைன்ஸ் நிறுவனம், 80.38 கோடி ரூபாயும், ஜெட்லைட் ஏர்-லைன்ஸ், 19.76 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், செயல்பாட்டில் இல்லாத, பாரமவுன்ட் ஏர்- வேஸ் நிறுவனமும், 1.75 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.பாரமவுன்ட் :நிலுவை தொகையை வசூல் செய்யும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஏ.ஏ.ஐ-யின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கிங்பிஷர், பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனங்கள் அவற்றின் விமான சேவையை நிறுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|