ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.560 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.560 உயர்வு ... உலக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு உலக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ...
அன்னிய செலாவணி வரவுக்காக...மீண்டும் இரும்பு தாது உற்பத்திமேற்கொள்ள அரசு நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2013
00:08

புதுடில்லி:மத்திய அரசு, மீண்டும் இரும்புத் தாது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
ஏற்றுமதிக்கு தடை:நாட்டின் பல மாநிலங்களில் முறைகேடாக இரும்புத் தாது வெட்டியெடுக்கப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம்கோர்ட் இதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.இந்நிலையில், நாட்டின் நலன் கருதி, சுரங்க அமைச் சகம் இத்தடையை தளர்வு செய்யும்படி சுப்ரீம்கோர்ட்டை அணுகவேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மத்திய அரசு,கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங் களின் ஒரு சில சுரங்கங்களில்இருந்து, மீண்டும் இரும் புத் தாது உற்பத்திமேற்கொள்ளும் வகையில், சுப்ரீம்கோர்ட்டை அணுக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, ஆனந்த் சர்மாமேலும் கூறியதாவது:கடந்த 2011ம் ஆண்டு, சுப்ரீம்கோர்ட், குறிப்பிட்ட சுரங்கங்களின் இரும்புத் தாது உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது.
இதன் காரணமாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில், இரும்புத் தாது ஏற்றுமதி, 1.84கோடி டன்னாக சரிவடைந் தது. அதேசமயம், 2009-10ம் நிதிஆண்டில், நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி,11.74கோடி டன்னாக இருந்தது. உலகளவில், இரும்புத் தாது ஏற்றுமதியில், இந்தியா மூன்றாவது மிகப் பெரிய நாடாக திகழ்ந்தது.அப்போது, நாட்டின் இரும்பு தாது ஏற்றுமதி மதிப்பு, 700கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த ஏற்றுமதி:தற்போது,நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளதால்,வர்த்தக பற்றாக் குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் உயர்ந்து உள்ளது. இதுவும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.உள்நாட்டில்,அனைத்து மாநிலங்களிலும், முறைகேடாக இரும்புத் தாது வெட்டி யெடுக்கப் படுவதில்லை. எனவே, இரும்புத் தாது உற்பத்தி, துவங்கப்படுவது அவசியமாக உள்ளது.
இரும்புத் தாது உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் நிலையில், உள்நாட்டுதேவைபோக, ஏற்றுமதி செய் யும் அளவிற்கு, இரும்பு தாது உபரியாக இருக்கும்.மேலும், மீண்டும் உற்பத்தி துவங்கும் நிலையில், பல்லாயிரக் கணக் கான தொழிலாளர்களுக்குவேலை வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த மாதம், பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் உருக்கு மற்றும் இரும்புத் தாது ஏற்றுமதியை உயர்த்தும் வகையில், நடவடிக்கைமேற்கொள்ளப்படவேண்டும் என, தெரிவித்துஇருந்தார். தற்போது, இரும்பு கட்டிகள் மற்றும் துகள் மீதான சுங்க வரி, 30 சதவீத அளவிற்கு உள்ளது.மத்திய அரசும், இதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், சுங்க வரியை குறைக்க ஆலோசித்துவருகிறது.தற்போது,உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்கு,9.50கோடிடன் இரும்பு தாது தேவைப் படுகிறது.
அன்னிய செலாவணி :இந்நிலையில், உற்பத்தி முழு அளவில் துவங்கும்போது,20- 22.50கோடி டன்னாக உயரும். மேலும், உள்நாட்டு உருக்கு நிறுவனங்களின், ஆண்டு உற்பத்தி திறன், 8.50கோடி டன் என்ற அளவிலேயே உள்ளது. இதை உடனடியாக, 20கோடி டன்னாக உயர்த்த முடியாது. எனவே, உள்நாட்டுதேவைபோக, உபரியாக உள்ள இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு அதிகஅளவில் அன்னியச் செலாவணி கிடைக்கும்.இவ்வாறு, ஆனந்த் சர்மா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)