பதிவு செய்த நாள்
03 செப்2013
12:36
முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை, பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.17 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது. உலகளவில் செல்போன் தயாரிப்பில் நம்பர்-1 நிறுவனமாக இருந்தது நோக்கியா. சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் வருகையால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் செல் விற்பனை மந்தமானது. ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு நோக்கியாவின் லூமியா போனில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆபிளிகேஷனை பயன்படுத்த இருநிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் நோக்கியா நிறுவனத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வந்த வண்ண இருந்தன.
இந்நிலையில் இப்போது அந்த செய்தி உண்மையாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியாவை 7.17 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் 2014ம் ஆண்டு முதல் காலாண்டில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் கூறுகையில், நோக்கியாவை வாங்குவதன் மூலம் இனி மைக்ரோசாப்ட் நிறுவனம், செல்போன் துறையிலும் லாபம் ஈட்ட இருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல எங்களை சார்ந்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், பங்குதாரர்களுக்கும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்று கூறியுள்ளார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|