முக்கிய துறைகளின் உற்பத்தி 3.1 சதவீதம் வளர்ச்சிமுக்கிய துறைகளின் உற்பத்தி 3.1 சதவீதம் வளர்ச்சி ... ரூபாயின் மதிப்பில் உயர்வு- ரூ.67.07 ரூபாயின் மதிப்பில் உயர்வு- ரூ.67.07 ...
லட்சக்கணக்கானநோயாளிகள் பயன்பெறுவர்: 350 முக்கிய மருந்துகளின் விலை குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2013
00:44

புதுடில்லி:மத்திய அரசின் மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவால், வரும் வாரங்களில், 350 முக்கிய மருந்துகளின் விலை கணிசமாக குறைய உள்ளது. இதனால், லட்சக்கணக்கானநோயாளிகளின், மருந்து செலவு வெகுவாக குறையும்.
ஒரே வகையான அடிப்படை மருந்தை பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள், வெவ்வேறு பெயர்களில் மருந்துகளை தயாரித்து சந்தைப்படுத்துகின்றன. இந்த மருந்துகளின் விலையை, நிறுவனங்கள், அவற்றின் விருப்பத்திற்கேற்ப நிர்ணயிக்கின்றன.
பரிந்துரை:ஒரேநோய்க்கு, பல்வேறு "பிராண்டு' பெயர்களில், வெவ்வேறு விலைகளில் மருந்துகள் விற்கப்படுகின்றன.சில மருத்துவர்கள், தங்களை "கவனிக்கும்' நிறுவனங்களின் மருந்துகளையே,நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். விலை அதிகம் என்றாலும், அவற்றை வாங்கவேண்டிய நிலைக்குநோயாளிகள் தள்ளப்படுகின்றனர்.
அதே மருந்தை, மற்றொரு நிறுவனம்,வேறு பெயரில் குறைந்த விலையில், விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வு, நோயாளிகளிடம் இல்லாத நிலை உள்ளது.இதுபோன்ற குளறுபடிக்கெல்லாம் முடிவு கட்டும் பொருட்டு, மத்திய அரசு, மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 350 முக்கிய மருந்துகளின் விலை, குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை இறுதி முதல், இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், சந்தையில் ஏற்கனவே உள்ள மருந்துகளை திரும்ப பெற்று, குறைக்கப்பட்ட புதிய விலையுடன், மீண்டும் சந்தைப்படுத்த, மருந்து நிறுவனங்களுக்கு, 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.இரு வாரங்களில் இந்த "கெடு' முடிவடைய உள்ள நிலையில், பல மருந்து நிறுவனங்கள், புதிய விலையில் மருந்துகளைசந்தைப்படுத்த துவங்கி விட்டன.
உத்தரவு:அதே சமயம், இந்த புதிய உத்தரவிற்கு, சில முன்னணி மருந்து நிறுவனங்களும், நாடு முழுவதும் உள்ள 7.5 லட்சம் மருந்து விற்பனையாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.சிப்லா,சன்பார்மா நிறுவனங்கள், புதிய உத்தரவை அமல்படுத்த, டில்லி உயர்நீதிமன்றத்தில், இடைக் கால தடை பெற்றுள்ளன.
அதே சமயம், இந்த புதிய உத்தரவால், மருந்து நிறுவனங்கள், தங்களின் லாப வரம்பை குறைத்து விட்டதாக, இந்திய மருந்து விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.ஓ.டீ.,) குற்றம் சாட்டியுள்ளது.மருந்து நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களுக்கு, 10ல் இருந்து, 7.5 சதவீதமாகவும், சில்லரை விற்பனையாளர்களுக்கு, 20ல் இருந்து, 13.75 சதவீதமாகவும், லாப வரம்பை குறைத்து விட்டதாக கூறப்படுகிறது.
லாப வரம்பு:300 சதவீதம் லாப வரம்பை பெறும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், குறைந்த பட்சம், 6 சதவீதமாவது, தங்களுக்கு வழங்கவேண்டும் என, மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, இன்று மும்பையில், ஏ.ஐ.சி.ஓ.டீ.,-ன் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)