தங்கம் விலை ரூ.352 குறைந்ததுதங்கம் விலை ரூ.352 குறைந்தது ... வளர்ந்த நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்...!! வளர்ந்த நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்...!! ...
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம் ஒரே நாளில் 5.72 லட்சம் டிக்கெட்டுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2013
12:27

புதுடில்லி : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம், நேற்று முன்தினம், 5.72 லட்சம் "இ-டிக்கெட்'டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களுக்கு ரயில் பயணம் மேற்கொள்வோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில், தங்களின் பெயர், முகவரி, இ-மெயில் போன்ற விவரங்களை பதிவு செய்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த இணையதளம் மூலம், ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கானவர்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 5.72 லட்சம் பேர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன், கடந்த ஆகஸ்டில், 5.04 லட்சம் பேரும், மார்ச், 2013ல், 5 லட்சம் பேரும், ஒரே நாளில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம், 135 லட்சம் பேர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளம் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சராசரியாக, ஒரு நாளைக்கு, 4.34 லட்சம் பேர், முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டில், இதே மாதத்தில், 123 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். சமீபத்தில், மொபைல்போன் மூலம், முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மொபைல் போனில் கூட, பயணிகள், தங்களின் பயண விவரங்களை, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)