பதிவு செய்த நாள்
04 செப்2013
12:27
புதுடில்லி : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம், நேற்று முன்தினம், 5.72 லட்சம் "இ-டிக்கெட்'டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களுக்கு ரயில் பயணம் மேற்கொள்வோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில், தங்களின் பெயர், முகவரி, இ-மெயில் போன்ற விவரங்களை பதிவு செய்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த இணையதளம் மூலம், ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கானவர்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 5.72 லட்சம் பேர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன், கடந்த ஆகஸ்டில், 5.04 லட்சம் பேரும், மார்ச், 2013ல், 5 லட்சம் பேரும், ஒரே நாளில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம், 135 லட்சம் பேர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளம் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சராசரியாக, ஒரு நாளைக்கு, 4.34 லட்சம் பேர், முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டில், இதே மாதத்தில், 123 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். சமீபத்தில், மொபைல்போன் மூலம், முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மொபைல் போனில் கூட, பயணிகள், தங்களின் பயண விவரங்களை, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|