பதிவு செய்த நாள்
04 செப்2013
12:35
மும்பை : ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் இன்று பதவியேற்று கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் சுப்பாராவ். இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ரகுராமை நியமிக்க கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. அதன்படி இன்று ரகுராம் ராஜன்(50) புதிய கவர்னராக பொறுப்பேற்று கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம், நாடு எதிர்நோக்கியுள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க என்னிடம் மந்திரக்கோல் எதுவும் கிடையாது. இருந்தபோதுமு் தற்போது உள்ள சூழ்நிலையை சமாளிக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. குறிப்பாக ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் நிதி வளர்ச்சி தொடர்பான திட்டங்களும் உள்ளன என்று கூறியுள்ளார்.
ரகுராம் ராஜன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். 2003 முதல் 2006ம் ஆண்டு வரை ஐ.எம்.எப்.ல் பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்ற தொடங்கினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|