பதிவு செய்த நாள்
07 செப்2013
00:17
புதுடில்லி: கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் மலர்கள் ஏற்றுமதி, 423.42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, "அபெடா' அமைப்பு தெரிவித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 365.32 கோடி ரூபாயாகவும், 2010-11ம் நிதி யாண்டில், 296 கோடி ரூபாயாகவும் இருந்தது.ஆக,கடந்த மூன்று ஆண்டுகளாக, நாட்டின் மலர்கள் ஏற்றுமதி, படிப்படியாக அதிகரித்து வருகிறது.நம் நாட்டிலிருந்து,கடந்த நிதி யாண்டில் மிக அதிகளவில், மலர்களை இறக்குமதி செய்து கொண்ட நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நாடு, 83.81 கோடி ரூபாய்க்கு, அவ்வாண்டில் மலர்களை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதையடுத்து, நெதர் லாந்து நாட்டிற்கு, 59.70 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மலர்கள் ஏற்றுமதியாகியுள்ளன.மேற்கண்ட நாடுகள் தவிர, ஜெர்மனி (56.75 கோடி ரூபாய்),இங்கிலாந்து(45.68 கோடி),கனடா(16.18 கோடி),ஜப்பான்(15.67 கோடி),ஐக்கிய அரபு நாடு கள்(15.45 கோடி),இத்தாலி (13.50 கோடி), எத்தியோப்பியா (12.32 கோடி) மற்றும் ஆஸ்திரேலியா (10.74 கோடி ரூபாய்) ஆகிய நாடுகளுக்கும், நம்நாட்டிலிருந்து, மலர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|