புதிய ஓய்வூதிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியதுபுதிய ஓய்வூதிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்... வேளாண் பொருள் ஏற்றுமதி ரூ.34,132 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2013
00:34

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34,132 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 32,061 கோடி ரூபாயாக இருந்தது என, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம் பாட்டு ஆணையம் (அபெடா) தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில், பாசுமதி அரிசி, இறைச்சி, கோதுமை மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
கொத்தவரை:அதேசமயம், இதுநாள் வரை, நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், அதிக பங்களிப்பை அளித்து வந்த, கொத்தவரை விதை ஏற்றுமதி, 57 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.இந்நிலையிலும், கணக் கீட்டு காலாண்டில்,வேளாண் பொருட்கள் ஏற்றுமதி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முழு நிதி யாண் டில், நாட்டின் ஒட்டு மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 1.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதில்,கொத்தவரை ஏற்றுமதியின் பங்களிப்பு,21 ஆயிரம் கோடிரூபாய்.நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில், இதன் ஏற்றுமதி, 4,702 கோடி ரூபாயாக சரிவுஅடைந்துள்ளது.கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இதன் ஏற்றுமதி, 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது.அமெரிக்கா உள்ளிட்ட, ஒரு சில நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண பணிகளுக்காக, இந்தியாவிலிருந்து, அதிகளவில் கொத்தவரை மற்றும் பசையை இறக்குமதி செய்து வந்தன.
பாசுமதி அரிசி:தற்போது இந்நாடுகள், இவற்றின்இறக்குமதியை குறைத்து கொண்டதால், ஒட்டு மொத்த அளவில், கொத்தவரை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி குறைந்து போயுள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். மதிப்பீட்டு காலாண்டில்,சாதாரண வகை அரிசி ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது என்றாலும், பாசு மதி அரிசி ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட,67 சதவீதம் அதிகரித்து,11,178 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, கோதுமை ஏற்றுமதி, 287 சதவீதம் அதிகரித்து, 1,019 கோடியிலிருந்து, 3,953 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பால்பொருட்கள்:இவை தவிர,கணக்கீட்டு காலாண்டில், பால் பொருட்கள் ஏற்றுமதி, 797 கோடி ரூபாயாகவும், இறைச்சி ஏற்றுமதி, 5,087 கோடி ரூபாயாகவும், குறிப்பிட்ட சில பருப்பு வகைகள் ஏற்றுமதி, 489 கோடி ரூபாயாகவும், பழங்கள் ஏற்றுமதி, 1,106 கோடி ரூபாயாகவும், காய்கறிகள் ஏற்றுமதி, 845 கோடி ரூபாயாகவும் இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவுஅடைந்துள்ளதால், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என, வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், "அபெடா' அமைப்பு, ஏற்றுமதிக் கான 20 மையங்களை தேர்வு செய்துள்ளது.
வெங்காயம்:இதன் கீழ், பாசுமதி அரிசிக்கான முக்கிய ஏற்றுமதி மையமாக, அரியானா மற்றும் பஞ்சாபையும், மாட்டி றைச்சி மையமாக, உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியையும், திராட்சை மற்றும் திராட்சை ரசத்திற்கான மையமாக, மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியையும் அடையாளம் கண்டுள்ளது.இவை தவிர, மாதுளை ஏற்றுமதிக்கான மையமாக, மகாராஷ்டிராவின் சத்தாரா மற்றும் புனே ஆகிய இடங்களை தேர்வு செய்துள்ளது.
உலர் வெங்காயம் மற்றும் பூண்டு ஏற்றுமதிக்கான மையமாக, குஜராத்தையும், கோழி மற்றும் முட்டைகளுக்கான மைய மாக, தமிழகத்தின் நாமக்கல் பகுதியையும், மாம்பழக்கூழ் ஏற்றுமதிக்கான மையமாக, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ் டிராவையும் இனம் கண்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)