வர்த்தகம் » பொது
முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 23.32 கோடி டன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 செப்2013
00:53
புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 1.85 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23.32 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், இதே காலத்தில், இத்துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 22.90 கோடி டன்னாக இருந்தது.
13 துறைமுகங்கள்:உள்நாட்டில், மிகப் பெரிய அளவில், 13 துறைமுகங்கள் உள்ளன. இவற்றுள், மேற்கு வங்கத்தில் இரண்டு துறைமுகங்களும், தமிழகத்தில், மூன்று துறைமுகங்களும், மகாராஷ்டிராவில், இரண்டு துறைமுகங்களும் உள்ளன.கணக்கீட்டு காலத்தில், கோல் கட்டாவில் உள்ள இரண்டு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 4.42 சதவீதம் அதிகரித்து, 1.71 கோடி டன்னிலிருந்து, 1.78 @காடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் கையாண்ட சரக்கின் அளவு, 8.36 சதவீதம் அதிகரித்து, 48.35 லட்சம் டன்னிலிருந்து, 52.39 லட்சம் டன்னாகவும், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 2.87 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.22 கோடி டன்னிலிருந்து, 1.26 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளது.பரதீப் துறைமுகம் கையாண்ட Œரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், 37.79 சதவீதம் அதிகரித்து, 2.11 @காடி டன்னிலிருந்து, 2.90 @காடி டன்னாக உயர்ந்துள்ளது.
இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் கையாண்ட சரக்கின் அளவு, 8.36 சதவீதம் அதிகரித்து, 48.35 லட்சம் டன்னிலிருந்து, 52.39 லட்சம் டன்னாகவும், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 2.87 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.22 கோடி டன்னிலிருந்து, 1.26 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளது.பரதீப் துறைமுகம் கையாண்ட Œரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், 37.79 சதவீதம் அதிகரித்து, 2.11 @காடி டன்னிலிருந்து, 2.90 @காடி டன்னாக உயர்ந்துள்ளது.
அ@தசமயம், விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கு, 4.38 சதவீதம் குறைந்து, 2.58 @காடி டன்னிலிருந்து, 2.46 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.தமிழகம்:தமிழகத்தில் இடம்பெற்றுள்ள எண்ணூர் துறைமுகம், நிறுவன அளவில் செயல்பட்டு வருகிறது. இத்துறைமுகம் கையாண்ட சரக்கு, கணக்கீட்டு காலத்தில், மிகவும் அதிகபட்சமாக, அதாவது, 57.30 சதவீதம் அதிகரித்து, 67.94 லட்சம் டன்னிலிருந்து, 1.07 @காடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இந்நிலையில், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 3.20 சதவீதம் குறைந்து, 2.28 கோடி டன்னிலிருந்து, 2.21 கோடி டன்னாகவும், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.13 சதவீதம் :சரிவடைந்து, 1.19 @காடி டன்னில் இருந்து, 1.17 @காடி டன்னாகவும் குறைந்துள்ளது.
கொச்சி:கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.69 சதவீதம் உயர்ந்து, 86.28 லட்சம் டன்னில்இருந்து, 88.60 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. புதிய மங்களூர் துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 12.26 சதவீதம் அதிகரித்து, 1.40 @காடி டன்னிலிருந்து, 1.58 @காடி டன்னாக உயர்ந்துள்ளது.அ@தசமயம், மர்ம@காவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 63.52 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.17 @காடி டன்னிருந்து, 42.54 லட்சம் டன்னாக சரிவுஅடைந்துள்ளது.
மும்பை துறைமுகம்:மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.87 சதவீதம் குறைந்து, 2.42 @காடி டன்னிலிருந்து, 2.27காடி டன்னாகவும், ஜவகர்லால் @நரு துறைமுகம் (@ஜ.என்.பி.டி.,) கையாண்ட சரக்கின் அளவு, 5.34 சதவீதம் சரிவடைந்து, 2.76 @காடி டன்னிலிருந்து, 2.61 கோடி டன்னாகவும் குறைந்து உள்ளது.கண்ட்லா துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், 5.56 சதவீதம் உயர்ந்து, 3.74 கோடி டன்னிலிருந்து, 3.95 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் @மலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 08,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 08,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 08,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 08,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 08,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!