இந்தியாவின் அன்னிய செலாவணிகையிருப்பு 223 கோடி டாலர் சரிவுஇந்தியாவின் அன்னிய செலாவணிகையிருப்பு 223 கோடி டாலர் சரிவு ... பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்...இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் கோடி டாலராக உயர்வு பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்...இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் ... ...
நிறுவனங்கள் திரட்டியவர்த்தக கடன் 371 கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2013
00:40

மும்பை:நடப்பாண்டு ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தக கடன் மற்றும் அன்னியச் செலாவணியில் மாற்றிக் கொள்ளக்கூடிய கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 371 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளன.இது, கடந்த ஜூன் மாதத்தில், 195 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி திரட்டக்கூடிய திட்டத்தின் கீழ், 72 நிறுவனங்கள், 139 கோடி டாலரை திரட்டி கொண்டு உள்ளன. மேலும், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கூடிய திட்டத்தின் கீழ், 10 இந்திய நிறுவனங்கள், 232 கோடி டாலரை திரட்டியுள்ளன. கணக்கீட்டு மாதத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மேற்கண்ட இரு வழிமுறைகளில் முறையே, 200 கோடி டாலர் மற்றும் 15 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளது.
இது தவிர, டில்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட், 10.80 கோடி டாலரையும், டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ், 1 கோடி டாலரையும் திரட்டி கொண்டு உள்ளன.மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (50 கோடி டாலர்), டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் (15 கோடி டாலர்), என்.டி.பி.சி., (12.43 கோடி டாலர்), அல்ட்ரா டெக் சிமென்ட் (5 கோடி டாலர்), கிண்டில் இன்ஜினியரிங் (4.80 கோடி டாலர்), ஆகிய நிறுவனங்களும், குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிநாட்டு வர்த்தக கடனை திரட்டி கொண்டு உள்ளன என, ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)