பதிவு செய்த நாள்
09 செப்2013
00:57

புதுடில்லி: நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 3,07,733 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1,25,780 டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், இந்திய சோயா புண்ணாக்கு மற்றும் கடுகு புண்ணாக்கிற்கு, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவை அதிகரித்தையடுத்து, ஒட்டு மொத்த புண்ணாக்கு ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 1,83,555 டன்னாகவும், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி, 90,735 டன்னாகவும் அதிகரித்துள்ளது. இவை தவிர, ‹ரியகாந்தி புண்ணாக்கு ஏற்றுமதி, 30,943 டன்னாகவும், தவிட்டு புண்ணாக்கு, 2,500 டன்னாகவும் உள்ளது.ஜப்பான்:இருப்பினும், நடப்பு நிதிஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்து, 13.35 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 14.82 லட்சம் டன்னாக இருந்தது.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஐந்து மாத காலத்தில், ஜப்பான் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 84 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 85,181 டன்னில்இருந்து, 13,077 டன்னாக சரிவுஅடைந்துள்ளது. இதே போன்று, வியட்நாமிற்கான புண்ணாக்கு ஏற்றுமதியும், 74 சதவீதம் சரிவடைந்து, 1,65,778 டன்னிலிருந்து, 42,981 டன்னாக குறைந்துள்ளது.
மேலும், இந்தோனேஷியாவிற்கான இதன் ஏற்றுமதி, 64 சதவீதம் குறைந்து, 96,900 டன்னில் இருந்து, 34,313 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.தென்கொரியா:அதேசமயம், ஈரான் மற்றும் தென்கொரிய நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி முறையே, 4,72,361 டன் மற்றும் 4,16,043 டன் என்ற அளவில் சற்று உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், 80 சதவீதத்திற்கும் அதிகமான புண்ணாக்கு, குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் வாயிலாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|