"கோல்டு இ.டி.எப்' திட்டங்களுக்கு வரவேற்பு குறைகிறது"கோல்டு இ.டி.எப்' திட்டங்களுக்கு வரவேற்பு குறைகிறது ... வரி வசூல் இலக்கு எட்டப்படவில்லை வரி வசூல் இலக்கு எட்டப்படவில்லை ...
ரப்பர் துறையில் முதலீடு செய்ய வியட்நாம் நாடு அழைக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
01:17

வியட்நாம் நாடு, ரப்பர் துறையில் முதலீடு செய்ய வருமாறு, இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.வியட்நாம் ரப்பர் கூட்டமைப்பு (வி.ஆர்.ஏ.,) பிரதிநிதிகள் குழு, இந்தியா வந்து, அனைத்திந்திய ரப்பர் தொழிலக கூட்டமைப்பு (ஏ.ஐ.ஆர்.ஐ.ஏ.,) உறுப்பினர்களை சந்தித்து பேசியது.பின்னர், இந்திய ரப்பர் தொழிலகங்களை பார்வையிட்ட வியட்நாம் குழுவினர், தங்கள் நாட்டில். ரப்பர் தொழிலில் முதலீடு செய்ய வருமாறு, இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த, ஏ.ஐ.ஆர்.ஐ.ஏ தலைவர் நிரஜ் தாக்கர், "இந்தியா - வியட்நாம் இடையே பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், விரைவில் இந்திய குழு, வியட்நாம் செல்லும்' என்றார்.வியட்நாம் நாட்டில் இருந்து, அதிக அளவில் ரப்பர் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா திகழ்கிறது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், வியட்நாம், 51,273 டன் இயற்கை ரப்பரை, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 28,114 டன்னாக இருந்தது. "ரப்பர் உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், அதன் நுகர்வில், வியட்நாம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆண்டுக்கு, சராசரியாக, 9 லட்சம் டன் இயற்கை ரப்பரை, வியட்நாம் உற்பத்தி செய்தாலும், அதில், 15 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது.இதையடுத்து, இயற்கை ரப்பர் உற்பத்தியை, 12 லட்சம் டன்னாக உயர்த்தவும், உள்நாட்டு பயன்பாட்டை, 40 சதவீதமாக அதிகரிக்கவும் வியட்நாம் திட்டமிட்டுள்ளது. - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)