பதிவு செய்த நாள்
11 செப்2013
01:17
வியட்நாம் நாடு, ரப்பர் துறையில் முதலீடு செய்ய வருமாறு, இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.வியட்நாம் ரப்பர் கூட்டமைப்பு (வி.ஆர்.ஏ.,) பிரதிநிதிகள் குழு, இந்தியா வந்து, அனைத்திந்திய ரப்பர் தொழிலக கூட்டமைப்பு (ஏ.ஐ.ஆர்.ஐ.ஏ.,) உறுப்பினர்களை சந்தித்து பேசியது.பின்னர், இந்திய ரப்பர் தொழிலகங்களை பார்வையிட்ட வியட்நாம் குழுவினர், தங்கள் நாட்டில். ரப்பர் தொழிலில் முதலீடு செய்ய வருமாறு, இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த, ஏ.ஐ.ஆர்.ஐ.ஏ தலைவர் நிரஜ் தாக்கர், "இந்தியா - வியட்நாம் இடையே பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், விரைவில் இந்திய குழு, வியட்நாம் செல்லும்' என்றார்.வியட்நாம் நாட்டில் இருந்து, அதிக அளவில் ரப்பர் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா திகழ்கிறது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், வியட்நாம், 51,273 டன் இயற்கை ரப்பரை, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 28,114 டன்னாக இருந்தது. "ரப்பர் உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், அதன் நுகர்வில், வியட்நாம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆண்டுக்கு, சராசரியாக, 9 லட்சம் டன் இயற்கை ரப்பரை, வியட்நாம் உற்பத்தி செய்தாலும், அதில், 15 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது.இதையடுத்து, இயற்கை ரப்பர் உற்பத்தியை, 12 லட்சம் டன்னாக உயர்த்தவும், உள்நாட்டு பயன்பாட்டை, 40 சதவீதமாக அதிகரிக்கவும் வியட்நாம் திட்டமிட்டுள்ளது. - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|