கர்நாடகா அரிசி வரத்தால் விலை குறைகிறது கர்நாடகா அரிசி வரத்தால் விலை குறைகிறது ... ரப்பர் துறையில் முதலீடு செய்ய வியட்நாம் நாடு அழைக்கிறது ரப்பர் துறையில் முதலீடு செய்ய வியட்நாம் நாடு அழைக்கிறது ...
"கோல்டு இ.டி.எப்' திட்டங்களுக்கு வரவேற்பு குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
01:16

தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் (கோல்டு இ.டி.எப்.,) இருந்து, சென்ற ஆகஸ்ட் மாதம், சாதனை அளவாக, நிகர அளவில், 588 கோடி ரூபாய்முதலீடு வெளியேறி உள்ளது.ரூபாய்மதிப்பு சரிவடைந்து, தங்கம் விலை திடீரென்று உயர்ந்ததால், லாப நோக்கம் கருதி, தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர்.
நிகர முதலீடு:நடப்பு ஆண்டில், கடந்த எட்டு மாதங்களில், ஆறு மாதங்களில், மேற்கண்ட திட்டங்களிலிருந்து, நிகர அளவில், அதிகளவு முதலீடு வெளியேறியுள்ளது. இதில், ஆகஸ்ட் மாதத்தில் தான் மிக அதிக அளவிலான முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.ஜனவரி மற்றும் மே மாதங்களில் மட்டும், இத்திட்டங்களில், முறையே 81 கோடி ரூபாய்மற்றும் 5 கோடி ரூபாய்முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில், 14 வகையான, தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. சென்ற ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 7.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், தங்க பரஸ்பர நிதி திட்டத்தின் பங்களிப்பு, ஒரு சதவீதம், அதாவது, 11,828 கோடி ரூபாய்என்ற அளவிற்கு உள்ளது.தங்கம் இறக்குமதியை கட்டுப் படுத்த, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால், தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
தங்கம் மீதான சுங்க வரியை, 4 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தியது, வங்கிகளின் தங்க நாணயங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கம் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.ரூபாய் மதிப்பு:இதனால், தங்க பரஸ்பர நிதி திட்டங்களை நிர்வகிக்கும் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு, தங்கம் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், தங்கம் விலை :அதிகரித்ததும், ரூபாய்மதிப்பு வீழ்ச்சி கண்டதும், தங்க பரஸ்பர நிதி திட்டங்களின் மீதான முதலீடு களை குறைக்க வழி வகுத்தன.இதனால், சில நிறுவனங்கள், தாமாகவே முன் வந்து, தங்க பரஸ்பர நிதி திட்ட முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளன.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)