பதிவு செய்த நாள்
12 செப்2013
00:50
புதுடில்லி:உள்நாட்டில் செயல்படும், 21 முன்பேர சந்தைகளை ஒழுங்குபடுத்தி வரும், பார்வர்ட் மார்க்கெட்ஸ் கமி ஷன் (எப்.எம்.சி.,) எனப்படும் முன்பேர சந்தை ஆணையம், மத்திய நிதி அமைச்கத்தின் கீழ் கொண்டு வரப் பட்டுள் ளது.
ரிசர்வ் வங்கி:இதுநாள் வரை, எப்.எம்.சி., அமைப்பு, மத்திய நுகர்வோர்விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வந்தது.இந்தியாவில்,முன்பேர வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,முன்பேர ஒப்பந்த ஒழுங்கு படுத்தும் சட்டம் - 1952' பிரிவின் கீழ், எப்.எம்.சி., அமைப்பு,மேற்கண்ட அமைச்கத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், நிதி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் (வங்கிகள் தவிர - இவை அனைத்தும் ரிசர்வ் வங்கி யின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன) அனைத்து கட்டுப்பாட்டு அமைப்புகளும் தற்போது, மத்திய நிதி அமைச்சகத் தின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன.
இதற்கு உதாரணமாக, இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி), ரிசர்வ் வங்கி (ஆர்.பீ.ஐ.,), காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும்மேம்பாட்டு ஆணையம் (இரிடா), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறைமேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டீ.ஏ.,) ஆகிய கட்டுப்பாட்டு அமைப்புகள், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொருளாதார விவகாரங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது, எப்.எம்.சி., அமைப்பும், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, எப்.எம்.சி., அமைப்பு, நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை:எதிர்வரும் காலத்தில், இந்த ஆணையத்தை "செபி' அமைப்புடன் இணைக்கவும் திட்ட முள்ளது.அதற்கேற்ப, முன்பேர ஒப்பந்த ஒழுங்கு படுத்தும் சட்டம் மற்றும்"செபி' அமைப்பின் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.போதிய அளவிற்கு, பணியாளர்கள் இல்லாததால், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், எப்.எம்.சி., அமைப்பை நிதி அமைச்கத்தின் கீழ் கொண்டு வர, ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|