மருந்து துறை ஏற்றுமதி 2,500கோடி டாலராக உயரும்மருந்து துறை ஏற்றுமதி 2,500கோடி டாலராக உயரும் ... உள்நாட்டில் சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்தது:"உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தின் எதிரொலி உள்நாட்டில் சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்தது:"உங்கள் பணம் உங்கள் ... ...
நாட்டின் முன்பேர சந்தை ஆணையம்மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
00:50

புதுடில்லி:உள்நாட்டில் செயல்படும், 21 முன்பேர சந்தைகளை ஒழுங்குபடுத்தி வரும், பார்வர்ட் மார்க்கெட்ஸ் கமி ஷன் (எப்.எம்.சி.,) எனப்படும் முன்பேர சந்தை ஆணையம், மத்திய நிதி அமைச்கத்தின் கீழ் கொண்டு வரப் பட்டுள் ளது.
ரிசர்வ் வங்கி:இதுநாள் வரை, எப்.எம்.சி., அமைப்பு, மத்திய நுகர்வோர்விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வந்தது.இந்தியாவில்,முன்பேர வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,முன்பேர ஒப்பந்த ஒழுங்கு படுத்தும் சட்டம் - 1952' பிரிவின் கீழ், எப்.எம்.சி., அமைப்பு,மேற்கண்ட அமைச்கத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், நிதி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் (வங்கிகள் தவிர - இவை அனைத்தும் ரிசர்வ் வங்கி யின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன) அனைத்து கட்டுப்பாட்டு அமைப்புகளும் தற்போது, மத்திய நிதி அமைச்சகத் தின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன.
இதற்கு உதாரணமாக, இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி), ரிசர்வ் வங்கி (ஆர்.பீ.ஐ.,), காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும்மேம்பாட்டு ஆணையம் (இரிடா), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறைமேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டீ.ஏ.,) ஆகிய கட்டுப்பாட்டு அமைப்புகள், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொருளாதார விவகாரங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது, எப்.எம்.சி., அமைப்பும், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, எப்.எம்.சி., அமைப்பு, நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை:எதிர்வரும் காலத்தில், இந்த ஆணையத்தை "செபி' அமைப்புடன் இணைக்கவும் திட்ட முள்ளது.அதற்கேற்ப, முன்பேர ஒப்பந்த ஒழுங்கு படுத்தும் சட்டம் மற்றும்"செபி' அமைப்பின் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.போதிய அளவிற்கு, பணியாளர்கள் இல்லாததால், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், எப்.எம்.சி., அமைப்பை நிதி அமைச்கத்தின் கீழ் கொண்டு வர, ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)