நாட்டின் முன்பேர சந்தை ஆணையம்மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வந்ததுநாட்டின் முன்பேர சந்தை ஆணையம்மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வந்தது ... உருக்கு பயன்பாடு 3கோடி டன்னாக உயர்வு உருக்கு பயன்பாடு 3கோடி டன்னாக உயர்வு ...
உள்நாட்டில் சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்தது:"உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தின் எதிரொலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
00:53

புதுடில்லி:சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை,நேரடியாக நுகர்வோருக்கே வழங்கும், "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தால், சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்துள் ளது. மத்திய அரசு, கடந்த 2012ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மானிய விலையில் வழங்கும் சமையல் எரிவாயுஉருளைக்கு, கட்டுப்பாடு விதித்தது.
சந்தை விலை:ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு மானிய விலையில், ஆறு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றும் அதற்குமேற்பட்ட பயன்பாட்டிற்கு, சந்தை விலையில் வாங்கவேண்டும் என, அறிவிக்கப்பட்டது. பின்னர், மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு வழங்கும் சமையல் எரிவாயு உருளை எண்ணிக்கை, ஒன்பதாக உயர்த்தப் பட்டது.இதைத் தொடர்ந்து, "உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ், "ஆதார்' அடையாள அட்டை தாரர் களின் வங்கிக் கணக்கில், சமையல் எரிவாயுவிற்கான மானியம்நேரடியாக செலுத்தும் நடைமுறை அறிமுகம்செய்யப்பட்டது.
இந்தியாவின், 670 மாவட்டங்களில், 34 மாவட்டங்களில்சோதனை அடிப்படையில், இத்திட்டம் அமல்படுத்தப் பட்டது.இதுபோன்ற நடவடிக்கைகளால்,சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்துள்ளது.மத்திய அரசு,மானிய விலையில் வழங்கும் சமையல் எரிவாயுவை, வர்த்தக செயல்பாடுகளுக்கு முறைகேடாக பயன்படுத்துவது குறைந்து உள்ளது."இதனால், சமையல் எரிவாயு நுகர்வு குறைந்துள்ளது' என, பீ.என்.பி. பரிபாஸ் செக்யூரிட்டீஸ் இந்தியாவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கம்:அதுமட்டுமின்றி,முறைகேடாக, பயன்படுத்தப்பட்ட, 65 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் முடக்கி வைக்கப்பட்டதும், அதன் நுகர்வை பெருமளவு குறைக்க வழி வகுத்துள்ளது என,பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வுபிரிவு தெரிவித்து உள்ளது. மானிய விலையிலான சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்துள்ளதால், மத்திய அரசின் மானியச் செலவினம் குறையும் என்பதுடன், அது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைய வும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)