தங்கம் விலை ரூ.40 குறைந்ததுதங்கம் விலை ரூ.40 குறைந்தது ... பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் -ரகுராம் ராஜன் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் -ரகுராம் ராஜன் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இனி ரூ.6 லட்சம் வருமானம் இருந்தால் மட்டுமே கார் லோன் - எஸ்.பி.ஐ., அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
12:58

புதுடில்லி : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு கீழ் பெறுபவர்களுக்கு கார் வாங்க கடன் தர முடியாது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ) அறிவித்துள்ளது. கார் கடன் திட்டத்தின் விதிமுறைகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக எஸ்.பி.ஐ., இவ்வாறு அறிவித்துள்ளது.

கடன் பெற தகுதி :


கார் கடன் திட்டத்தின் மூலம் கார் வாங்குபவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்த்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தி உள்ளது. இதே போன்று எஸ்.பி.ஐ.,யில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கார் கடன் உச்சவரம்பும் ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தின்படி, 10.45 சதவீதம் வட்டிவிகிதத்தில் கார் கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ., வாகன கடன் :

எஸ்.பி.ஐ.,யின் வாகன கடன் அளவு, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில் 38.71 சதவீதம் அதிகரித்து ரூ.26,411 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் முதல் காலாண்டு இறுதியில் வாகன கடன் அளவு ரூ.19,040 கோடியாக இருந்தது. எஸ்.பி.ஐ.,யின் சந்தை பங்குகளும் 2.44 சதவீதத்தில் இருந்து 2.91 சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கியின் பயன்படுத்தப்படாத சொத்து வரம்பும் 4.99 சதவீதத்தில் இருந்து 5.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வங்கி விளக்கம் :

வங்கியின் பொருளாதாரத்தை சீராக்குவதற்காக கடன் பெறுபவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை திருத்தி அமைத்திருப்பதாக எஸ்.பி.ஐ.,யின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருங்காலத்தில் சரிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடன் வாங்குபவர்களுக்கான வருமான கட்டுபாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)