பதிவு செய்த நாள்
12 செப்2013
12:58
புதுடில்லி : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு கீழ் பெறுபவர்களுக்கு கார் வாங்க கடன் தர முடியாது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ) அறிவித்துள்ளது. கார் கடன் திட்டத்தின் விதிமுறைகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக எஸ்.பி.ஐ., இவ்வாறு அறிவித்துள்ளது.
கடன் பெற தகுதி :
கார் கடன் திட்டத்தின் மூலம் கார் வாங்குபவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்த்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தி உள்ளது. இதே போன்று எஸ்.பி.ஐ.,யில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கார் கடன் உச்சவரம்பும் ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தின்படி, 10.45 சதவீதம் வட்டிவிகிதத்தில் கார் கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ., வாகன கடன் :
எஸ்.பி.ஐ.,யின் வாகன கடன் அளவு, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில் 38.71 சதவீதம் அதிகரித்து ரூ.26,411 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் முதல் காலாண்டு இறுதியில் வாகன கடன் அளவு ரூ.19,040 கோடியாக இருந்தது. எஸ்.பி.ஐ.,யின் சந்தை பங்குகளும் 2.44 சதவீதத்தில் இருந்து 2.91 சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கியின் பயன்படுத்தப்படாத சொத்து வரம்பும் 4.99 சதவீதத்தில் இருந்து 5.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வங்கி விளக்கம் :
வங்கியின் பொருளாதாரத்தை சீராக்குவதற்காக கடன் பெறுபவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை திருத்தி அமைத்திருப்பதாக எஸ்.பி.ஐ.,யின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருங்காலத்தில் சரிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடன் வாங்குபவர்களுக்கான வருமான கட்டுபாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|