கறிக்கோழி உற்பத்தி 60 லட்சம் டன்னை எட்டும்கறிக்கோழி உற்பத்தி 60 லட்சம் டன்னை எட்டும் ... வளைகுடா மக்களை மயக்கும் இந்திய வாழைப்பழங்கள் வளைகுடா மக்களை மயக்கும் இந்திய வாழைப்பழங்கள் ...
ரப்பர் உற்பத்தி சரிவடையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2013
00:37

கொச்சி:நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், மதிப்பீட்டை விட குறையும் என, ரப்பர் வாரி யத்தின் தலைவர் ஷீலா தாமஸ் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:உலகளவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில், இந்தியா, நான்காவது மிகப்பெரிய நாடாகவும், பயன்பாட்டில், சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இலை உதிர்வு:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இயற்கை ரப்பர் மரங்கள் உள்ள பரப்பளவு, 5.04 லட்சம் ஹெக்டே ராக இருந்தது.இது, நடப்பு நிதியாண்டில்,5.18 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உள்ளது.இருப்பினும்,அதிக மழைப் பொழிவு மற்றும் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் இலை உதிர்வது போன்ற காரணங்களால், நடப்பு நிதி யாண் டில், உள்நாட்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில்,2.70 லட்சம் டன் நாட்டின் இயற்கை ரப்பர் கையிருப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், இதன் உற்பத்தி, 2.65 லட்சம் டன்னாகவும்,பயன்பாடு, 4.09 லட்சம் டன்னாகவும் உள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 30,451 டன்னாக இருந்தது. குறிப்பாக, மலேசியாவிற்கு அதிகபட்சமாக, 9,934 டன் இயற்கை ரப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ரப்பர் ஷீட்டுகள் :இதையடுத்து, சீனா (5,851 டன்), இலங்கை (4,982 டன்), ஈரான் (2,478 டன் ), இத்தாலி (1,361 டன்), ஜெர்மனி (1,323 டன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.இந்தியாவில், ரப்பர் ஷீட்டுகள் தயாரிப்பதற்கு, 90 சதவீதம் இயற்கை ரப்பரே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ஷீலா தாமஸ் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)