பதிவு செய்த நாள்
15 செப்2013
01:01
மும்பை:நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, நடப்பு செப்டம்பர் மாதம் 6ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 69 கோடி டாலர் (4,140 கோடி ரூபாய்) சரிவடைந்து, 27,480 கோடி டாலராக (16.49 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 223 கோடி டாலர் (13,380 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 27,549 கோடி டாலராக இருந்தது.
ஆக, தொடர்ந்து மூன்று வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சரிவுஅடைந்து வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 65.65 கோடி டாலர் குறைந்து, 24,674 கோடி டாலராக சரிவுஅடைந்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள, தங்கத்தின் மதிப்பு மாற்றம் எதுவுமின்றி, 2,172 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 1.96 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 435 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 90 லட்சம் டாலர் குறைந்து, 198 கோடி டாலராகவும் சரிவு அடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென், ஸ்டெர்லிங் உள்ளிட்ட செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கணக்கீட்டு வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|