பொது பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வுபொது பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு ... நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி மிதமான வளர்ச்சி நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி மிதமான வளர்ச்சி ...
பொருளாதார மந்த நிலையால்... வேலை இழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2013
00:29

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 10 மாதங்களில், நாடு தழுவிய அளவில், பல்வேறு துறைகளில், வேலை இழந்தோர் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டிஉள்ளதாக, ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தயாரிப்பு துறை:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 0.2 சதவீதம் சரிவடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தனிநபர் நுகர்வு, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1.6 சதவீதம் என்ற அளவில் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 2012-13ம் நிதியாண்டில், 5 சதவீதமாக சரிவடைந்தது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.கடந்த 10 மாதங்களில், இந்திய மோட்டார் வாகன துறையில், வேலை இழந்தோர் எண்ணிக்கை, 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில், தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கை, 14 -15 ஆயிரமாகும்.மோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட பின்னடைவால், இத்துறை நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்களை அளித்து வரும் நிறுவனங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ஒரு சில நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 60-70 சதவீத அளவிற்கே உற்பத்தி மேற்கொண்டு வருகின்றன.
மோட்டார் வாகன துறையை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைகளில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.அடிப்படை கட்டமைப்பு:இதையடுத்து, பங்கு தரகு நிறுவனங்கள் (12 ஆயிரம் பேர்), கட்டுமான துறை (10 ஆயிரம்), அடிப்படை கட்டமைப்பு, மின்சாரம், கனரக பொறியியல் (4,978), விமான சேவை (4,000), கல்வி (3,500) மற்றும் சுற்றுலா (1,200 பேர்) ஆகிய துறைகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாக, மனிதவள ஆலோசனை சேவையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)