பதிவு செய்த நாள்
17 செப்2013
00:29
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 10 மாதங்களில், நாடு தழுவிய அளவில், பல்வேறு துறைகளில், வேலை இழந்தோர் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டிஉள்ளதாக, ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தயாரிப்பு துறை:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 0.2 சதவீதம் சரிவடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தனிநபர் நுகர்வு, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1.6 சதவீதம் என்ற அளவில் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 2012-13ம் நிதியாண்டில், 5 சதவீதமாக சரிவடைந்தது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.கடந்த 10 மாதங்களில், இந்திய மோட்டார் வாகன துறையில், வேலை இழந்தோர் எண்ணிக்கை, 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில், தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கை, 14 -15 ஆயிரமாகும்.மோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட பின்னடைவால், இத்துறை நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்களை அளித்து வரும் நிறுவனங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ஒரு சில நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 60-70 சதவீத அளவிற்கே உற்பத்தி மேற்கொண்டு வருகின்றன.
மோட்டார் வாகன துறையை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைகளில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.அடிப்படை கட்டமைப்பு:இதையடுத்து, பங்கு தரகு நிறுவனங்கள் (12 ஆயிரம் பேர்), கட்டுமான துறை (10 ஆயிரம்), அடிப்படை கட்டமைப்பு, மின்சாரம், கனரக பொறியியல் (4,978), விமான சேவை (4,000), கல்வி (3,500) மற்றும் சுற்றுலா (1,200 பேர்) ஆகிய துறைகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாக, மனிதவள ஆலோசனை சேவையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|