பறக்கிறது வெங்காய விலைபறக்கிறது வெங்காய விலை ... தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.496 அதிகரிப்பு தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.496 அதிகரிப்பு ...
அகவிலைப்படி 10 சதவீதம் உயருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2013
10:40

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். கடந்த, ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிட்டது.இது, ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்கப்படும். இதன்படி, அடிப்படை சம்பளத்தில், 72 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, ஜனவரி 1ம் தேதி முதல் 8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், 80 சதவீதத்தை எட்டியது.இந்நிலையில், ஜூலை மாதத்திலிருந்து அகவிலைப்படியை, 10 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை கவரும் வகையில், இந்த இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 2010ல், 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, தற்போது தான், இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.இந்த அறிவிப்பால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன் அடைவர். இந்த உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும், 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.அகவிலைப்படி, 90 சதவீதத்தை எட்டுவதால், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அகவிலைப்படி, 50 சதவீதத்தை தாண்டும்போது, அவற்றை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் நடைமுறை உள்ளது. எனவே இதற்கான அறிவிப்பை, ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வை அடிப்படையாக வைத்து, தமிழக அரசும், தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் அறிவிப்பை வெளியிடும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)