பதிவு செய்த நாள்
20 செப்2013
11:35
புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இன்று தனது முதல் பணக்கொள்கையை வெளியிட்டார். இது மத்திய காலாண்டிற்கான பணக்கொள்ளையாகும். இதில் பண மதிப்பை உயர்த்தும் அதிரடி நடவடிக்கையாக யாரும் எதிர்பாராத விதமாக ரிப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளார். இதன் மூலம் ரிப்போ விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 25 அடிப்படைக் கொள்கைகளின்படி ரிப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எம்.எஸ்.எப்., எனப்படும் வங்கிகளின் வட்டிவிகிதத்தையும் 0.75 சதவீதம் குறைத்துள்ளது,ரிசர்வ் வங்கி. இதன்படி வங்கிகளின் வட்டிவிகிதம் 9.5 சதவீதமாக மாறி உள்ளது. பண இருப்பு விகிதத்தை பாதுகாப்பதற்காக தினசரி பணப்புழக்கத்திற்கான குறைந்தபட்ச விகிதம் 99 சதவீதத்தில் இருந்து 95 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் கவலை அளிப்பதாக தெரிவித்த ரகுராம் ராஜன், பணவீக்கத்தில் தன்னிறைவு பெற வழியில்லை எவன தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது; அதை வளர்ச்சி பாதையில் உள்ள முடக்கங்களை சரிசெய்ய திட்டங்கள் துவங்கப்படும். இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடவடிக்கையால் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|