பதிவு செய்த நாள்
20 செப்2013
13:46
சென்னை: கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், தீபாவளி தள்ளுபடி விற்பனை மற்றும் தங்க மழை பரிசுப் போட்டி திட்டம், நேற்று துவக்கப்பட்டது. சென்னை கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், கைத்தறித் துறை அமைச்சர் சுந்தரராஜ், தீபாவளி தள்ளுபடி விற்பனை மற்றும் தங்கமழை பரிசுப் போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கைத்தறித் துறை செயலர் ஹர்மந்தர் சிங், கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீபாவளியையொட்டி, கோ - ஆப்டெக்சில், அனைத்து துணிகளுக்கும், 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கமழை பரிசுப் போட்டி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள், 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும், முதல் பரிசாக, பத்து பேருக்கு, தலா, எட்டு கிராம் தங்கம், ஆறுதல் பரிசாக, பத்து பேருக்கு, தலா, இரண்டு கிராம் தங்கம் வழங்கப்படும் . கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், 2,000 ரூபாய்க்கு துணி வாங்குவோருக்கு, ஒரு கூப்பன் வழங்கப்படும்; அதில், கேட்கப்படும் கேள்விகளுக்கு, பதில் எழுதுவதுடன், கோ-ஆப்டெக்ஸ் குறித்து, வாசகம் ஒன்று எழுத வேண்டும். சிறந்த, வாசகம் எழுதியோர், அடுத்த ஆண்டு, ஜன., 30ம் தேதி தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு, பரிசு வழங்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|