பதிவு செய்த நாள்
26 செப்2013
00:48
புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 5 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி காணும் என, டாட்டா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலையால், ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகன துறைகளில் உருக்கிற்கான பயன்பாடு மிகவும் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் உருக்கு பயன்பாடு, 5 சதவீதம் என்ற அளவில்தான் வளர்ச்சி காணும் என, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், எச்.எம். நெரூர்கர் தெரிவித்தார்.
சென்ற 2012–13ம் நிதியாண்டில், இந்தியாவில் உருக்கு பயன்பாடு,3.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைந்த பட்ச அளவாகும்.இது, கடந்த 2011–12ம் நிதியாண் டில், 5.5 சதவீதம் என்ற அளவிலும்,
2010–11ம் நிதியாண்டில், 9.9 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|