நாட்டின் பட்டாணி உற்பத்தி39.42 லட்சம் டன்னாக வளர்ச்சிநாட்டின் பட்டாணி உற்பத்தி39.42 லட்சம் டன்னாக வளர்ச்சி ... என்.எஸ்.இ.எல்., மீது சி.பி.ஐ., நடவடிக்கை:நிதி அமைச்சர் சிதம்பரம் தகவல் என்.எஸ்.இ.எல்., மீது சி.பி.ஐ., நடவடிக்கை:நிதி அமைச்சர் சிதம்பரம் தகவல் ...
இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டும்:இன்று உலக சுற்றுலா தினம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2013
01:37

புதுடில்லி:வரும் 2015ம் ஆண்டில், இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 80 லட்சத்தை தாண்டும் என, ‘அசோசெம்’ அமைப்பு தெரிவித்து உள்ளது.இன்று, உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ‘அசோசெம்’ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:
அன்னிய செலாவணி:தற்போது, இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 70 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதன் வாயிலாக, 2,000 கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கிறது.இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 13 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனடிப்படையில், வரும் 2015ம் ஆண்டில், இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 80 லட்சத்தை தாண்டும் என்பதுடன், அவ்வாண்டில், சுற்றுலா பயணிகள் வாயிலாக, 2,600 கோடி டாலர் வருவாய் கிடைக்கும்.
தற்போதைய நிலையில், உள்நாட்டில், அதிகளவில் அன்னிய சுற்றுலா பயணிகளை கவருவதில், மகாராஷ்டிரா, தமிழகம், டில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை முக்கிய மையங்களாக உள்ளன. இந்தியாவிற்கு வரும், மொத்த சுற்றுலா பயணிகளில், மேற்கண்ட மையங்களுக்கு வருபவர்களின் பங்களிப்பு, 70 சதவீதம் என்ற அளவில் உள்ளது.காராஷ்டிராவின் பங்களிப்பு, 25 சதவீதம் என்ற அளவிலும், தமிழகத்தின் பங்களிப்பு, 17 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. இவற்றை தொடர்ந்து, டில்லி (11 சதவீதம்), உத்தர பிரதேசம் (10 சதவீதம்) மற்றும் ராஜஸ்தான் (7 சதவீதம்) ஆகியவை உள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்திய சுற்றுலா துறையின் பங்களிப்பு, 6.6 தவீத அளவிற்கு உள்ளது.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழ்நிலையில், சுற்றுலா பயணிகள் வாயிலான வருவாய், அதிகரித்து வருவது, நாட்டிற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது.
மத்திய அரசும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், விசா உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது. நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் (6,080 கோடி டாலர்), நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (4,330 கோடி டாலர்)ம ற்றும் போக்குவரத்து சாதனங்கள் (1,830 கோடி டாலர்) ஆகிய துறைகளை அடுத்து, அதிகளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில், சுற்றுலா துறை முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
அமெரிக்கா:உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளில், அமெரிக்கர்களின் பங்களிப்பு, 16 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து (11.9 சதவீதம்), வங்கதேசம் சதவீதம்), இலங்கை (4.5 சதவீதம்), கனடா (3.8 சதவீதம்) ஆகிய ஐந்து நாடுகள் முன்னிலை வகிப்பதாக, அசோசெம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)