பதிவு செய்த நாள்
27 செப்2013
01:49
புதுடில்லி:நடப்பு செப்டம்பர் மாதத்தின், முதல், 15 தினங்களில், உள்நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில், வர்த்தகம் ரூ.3.31 லட்சம் கோடி ரூபாயாக, கடும் சரிவை கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை (8.90 லட்சம் கோடி ரூபாய்) விட, 63 சதவீதம் சரிவாகும் என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) புள்ளிவிவரத்தில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எப்.எம்.சி., அமைப்பு, ஒரு சில பொருட்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்திடும் வகையில், கூடுதல் வரம்பு தொகையை நிர்ணயித்தது. இதன் காரணமாகவே, முன்பேர சந்தைகளில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், வர்த்தகம் குறைந்து போயுள்ளது என, ரெலிகேர் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுகந்தா சச்தேவா
தெரிவித்தார்.
விளைபொருள் வர்த்தகத்தின் மீது, பரிவர்த்தனை வரி விதிக்கப்பட்டதையடுத்து, இத்துறை பாதிப்படைந்துள்ள நிலையில், எப்.எம்.சி., அமைப்பு, மதிப்பு மிகு உலோகங்கள் மீது, கூடுதலாக, 5 சதவீத வரம்பு தொகையை நிர்ணயித்தது.இது தவிர, கொத்தவரை விதை மற்றும் பசைகள் வர்த்தகத்தின் மீது, கூடுதலாக, 10 சதவீத வரம்பு தொகையை நிர்ணயித்து உள்ளது.இதன் காரணமாகவே, முன்பேர சந்தைகளில் வர்த்தகம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|