பற்றாக்குறையால் பழைய தங்கத்தை நாடும் ஆபரண தயாரிப்பாளர்கள்பற்றாக்குறையால் பழைய தங்கத்தை நாடும் ஆபரண தயாரிப்பாளர்கள் ... தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.416 அதிகரிப்பு தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.416 அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பால்... வெள்ளி இறக்குமதி 311 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2013
02:29

தங்கம் போன்று, வெள்ளிக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், அதனை வர்த்தகர்கள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றனர். இதனால் நடப்பு 2013–14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வெள்ளி இறக்குமதி, 311.11 சதவீதம் அதிகரித்து, 178 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 43.38 கோடி டாலராக இருந்தது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை:சென்ற 2012–13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதமாக (8,800 கோடி டாலர்) உயர்ந்துள்ளது. இதை, நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், 3.8 சதவீதமாக (7,000 கோடி டாலர்) குறைக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அவற்றில் ஒன்றாக, கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் அன்னியச் செலாவணி வெளியேறுவதற்கு காரணமாக உள்ள, தங்கத்தின் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வங்கிகள், தங்க நாணயங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இறக்குமதியாகும் தங்கத்தில், 20 சதவீதம், மதிப்பு கூட்டப்பட்ட தங்க நகைகளாக ஏற்றுமதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தங்க நகைகளின் இறக்குமதிக்கு, 15 சதவீத வரி விதிக்கப்பட்டது. மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்க நகைகளுக்கு வழங்கும் கடன் வரம்பு குறைக்கப்பட்டது.
இது போன்ற நடவடிக்கைகளின் பயனாக, தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் இறக்குமதி, 27 டன்னாக இருந்தது. இது, ஆகஸ்ட்டில் 0.14 டன்னாக சரிவடைந்தது.அதே சமயம், வெள்ளி இறக்குமதி அதிகரித்தது.இது குறித்து ஆமதாபாத்தை சேர்ந்த பங்கு மற்றும் விளைபொருள் வர்த்தக தரகு நிறுவனமான அமரபலி இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மோனல் தாக்கர் கூறியதாவது:
கட்டுப்பாடுகள்:மத்திய அரசு, தங்கத்தின் இறக்குமதிக்கு எப்போது கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியதோ, அதில் இருந்து வெள்ளி இறக்குமதி திடீரென்று உயர்ந்து வருகிறது. தங்கம் போன்று, வெள்ளிக்கும் அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்ற அச்சம் தான் இதற்கு காரணம். அதனால், வர்த்தகர்கள் அதிக அளவில் வெள்ளியை வாங்கி குவித்து வருகின்றனர்.
மேலும், தற்போது வெள்ளியும் மிகச் சிறந்த முதலீடாக கருதப்படுவதால், அதில் மக்கள் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதனால், வெள்ளி நகைகள், வெள்ளி சாமான்களுக்கான தேவை பெருகி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரண்டு மடங்கு:நடப்பாண்டு, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில், வெள்ளி இறக்குமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கிற்கும் அதிகமாக, அதாவது, 4,000 டன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில், 1,900 டன்னாக மிகவும் குறைந்து காணப்பட்டது.இது குறித்து, தாம்சன் ராய்ட்டர்ஸ் ஜி.எப்.எம்.எஸ் நிறுவன ஆய்வாளர் சுதீஷ் நம்பியாத் கூறியதாவது:
தங்கம் மீதான கட்டுப்பாடு கள் காரணமாக, வெள்ளியின் இறக்குமதி அதிகரித்துள்ளது. நடப்பாண்டு மத்தியிலேயே, வரும் டிசம்பர் வரை வெள்ளி நகைகள், வெள்ளி சாமான்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்வதற்கான ஆர்டர்களை நிறுவனங்கள் பெற்றுள்ளன.
பண்டிகை காலத் தேவையை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே கிடைத்துள்ள ஆர்டர் காரணமாகவும், வெள்ளியின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இருந்த போதிலும், சர்வதேச சந்தையில், கடந்த ஏப்ரலில் வெள்ளி விலை குறைந்திருந்ததால், அதன் இறக்குமதி அதிகரித்து காணப்பட்டது. அதன் பின்னர் வெள்ளி விலை உயர்ந்ததால், இறக்குமதியும் சற்று குறைந்துள்ளது. சென்ற ஆகஸ்ட்டில், வெள்ளி இறக்குமதி, 300 டன் என்ற அளவிற்கே இருந்தது.
முன்பேர வர்த்தகம்:ஒரு கிலோ வெள்ளியின் விலை, 55 ஆயிரம் ரூபாயை எட்டியது முதல், முதலீட்டாளர்களும், தங்கம், வெள்ளி வர்த்தகர்களும், வெள்ளியில் முதலீடு செய்வதை குறைத்துக் கொண்டனர். இதன் விளைவாக, வெள்ளி இறக்குமதி சற்று குறைந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் நடப்பு செப்டம்பர் வரையிலான காலாண்டில், எம்.சி.எக்ஸ் நிறுவனத்தின் முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், 75 டன் வெள்ளி சப்ளை செய்யப் பட்டுள்ளது. இதில் இருந்தே, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு, வெள்ளியின் மீது உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ளலாம்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)