பதிவு செய்த நாள்
01 அக்2013
00:40
புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 3.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த, 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 6.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப் பட்டது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.நிலக்கரி:கணக்கீட்டு மாதத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி, 11.8 சதவீதம் என்ற அளவிலிருந்து, 5.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது.
அதேசமயம், கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி, மைனஸ், 0.6 சதவீதம்என்ற அளவிலிருந்து, மைனஸ், 1.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவுஅடைந்து உள்ளது.இதே போன்று, இயற்கை எரிவாயு துறை உற்பத்தி, மைனஸ், 13.5 சதவீதம் என்ற அளவிலிருந்து, மைனஸ், 16.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டுள்ளது.
சுத்திகரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 31.8 சதவீதம் என்றளவில்மிகவும் அதிகரித்திருந்தது.ஆனால், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.9 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.அதேசமயம், கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உரத் துறையின் உற்பத்தி,மைனஸ், 2.1 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டிருந்தது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 1.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
சிமென்ட்:கணக்கீட்டு மாதத்தில், உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.9 சதவீதத்தில்இருந்து, 4.3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 0.4 சதவீதம் என்ற அளவிலிருந்து, 5.5 சதவீதம் என்ற அளவிலும், மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.9 சதவீதம் என்ற அளவிலிருந்து, 6.7 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|