பதிவு செய்த நாள்
01 அக்2013
09:59
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் அதிகரித்து 19452.05 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 5751.92 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான, நேற்று மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்காவின் நிதிச் செலவின கோரிக்கைக்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் எதிரொலியாக, இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில், வர்த்தகம்சரிவுடன் முடிவடைந்தன.குறிப்பாக, ‘சென்செக்ஸ்’ 1.76 சதவீதம் சரிவுடனும், ‘நிப்டி’, 1.68 சதவீதம் சரிவுடனும் முடிவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|