பதிவு செய்த நாள்
03 அக்2013
01:18
மும்பை:இந்தியாவில் மருத்துவ சாதனங்களின் சந்தை மதிப்பு, வரும் 2014ம் ஆண்டில், 580 கோடி டாலராக உயரும் என, கிராண்ட் தார்ன்டன் இந்தியா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தற்போது, இந்திய மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் சந்தை மதிப்பு, 440 கோடி டாலராக உள்ளது. இது, வரும், 2014ம் ஆண்டில், 580 கோடி டாலராகவும், 2016ம் ஆண்டில், 780 கோடி டாலராகவும் வளர்ச்சி காணும். இத்துறையின் சராசரி, ஆண்டு வளர்ச்சி, 15.5 சதவீதமாக இருக்கும்.
இந்தியா, ஆசியாவின் நான்காவது மிகப் பெரிய மருத்துவ சாதனங்கள் சந்தையாக திகழ்கிறது. உலகளவில், இத்துறையில் முன்னணியில் உள்ள 20 நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில், 700க்கும் மேற்பட்ட மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.ஆரோக்கிய பராமரிப்பு குறித்த அக்கறை, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இத்துடன் மருத்துவ காப்பீடு செய்து கொள்வதும் பெருகி வருகிறது.
இது போன்ற காரணங்களால், இந்திய மருத்துவசாதனங்களுக்கான சந்தைக்கு வளர்ச்சி வாய்ப்பு நன்கு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|