பதிவு செய்த நாள்
07 அக்2013
00:21
புதுடில்லி:பாரம்பரிய சந்தைகளான, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான, நம்நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற 2012–13ம் நிதியாண்டில், 10 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், தோல் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளின் பக்கம், ஏற்றுமதியாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என, இந்திய தோல் மற்றும் தோல் பதப்படுத்துவோர் கூட்டமைப்பின் தலைவர் எம். ரபீக் அகமது தெரிவித்தார்.
சென்ற 2012–13ம் நிதியாண்டில், நம்நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 3 சதவீதம் உயர்ந்து, 500 கோடி டாலரை எட்டியுள்ளது. எனினும், இது எதிர்பார்த்த அளவான, 540 கோடி டாலரை காட்டிலும் குறைவாகும்.இதற்கு முந்தைய 2011–12ம் நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 480 கோடி டாலராக இருந்தது.சென்ற நிதியாண்டில், ஸ்பெயின், இத்தாலி போன்ற ஒரு சில பாரம்பரிய சந்தைகளில், இந்திய தோல் பொருட்களின் ஏற்றுமதி, 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.இருப்பினும், அமெரிக்கா மற்றும் டென்மார்க் நாடுகளுக்கான, இதன் ஏற்றுமதி, 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், இங்கிலாந்திற்கான ஏற்றுமதியும், 10 சதவீதம் உயர்ந்துள்ளது.எனினும், நடப்பு நிதியாண்டில் ஒட்டு மொத்த அளவில், தோல் பொருட்களின் ஏற்றுமதியை உயர்த்தும் வகையில், அதிக வர்த்தக வாய்ப்புள்ள ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் பக்கம், ஏற்றுமதியாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.இது தவிர, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், புதிய ஏற்றுமதி கொள்கைகள் மற்றும் வரி சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.நாட்டிற்கு, அதிகளவில், அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும், 10 துறைகளுள், தோல் பொருட்கள் துறையும் ஒன்று என, ரபீக் அகமது மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|