பதிவு செய்த நாள்
08 அக்2013
03:59
மும்பை:விதிமுறைகளை தளர்த்தினால், இந்தியவிமானச் சேவை, வரும் 2021ம் ஆண்டு, 10 கோடி எண்ணிக்கையை தாண்டும் என, ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் (காபா) தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்த மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில் உள்ள பல விமானச் சேவை நிறுவனங்களுக்கு, சர்வதேசவிமானச் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டால், அவற்றின் நிதிநிலைமை மேலும் வலுப்பெறும். ஆனால், இதற்கு தடையாக, விமான போக்குவரத்து விதிமுறை உள்ளது. தற்போது, உள்நாட்டில் ஐந்து ஆண்டுகள் விமான சேவையை மேற்கொண்ட நிறுவனத்திற்கு மட்டுமே, சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், அந்நிறுவனம், சொந்தமாக,20 விமானங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, பல உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்கள், சர்வதேச விமானச் சேவையை மேற்கொள்ள இயலாமல் உள்ளன.அதே சமயம், சர்வதேச விமானச் சேவை நிறுவனங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லை. இதனால், அவற்றின் சர்வதேச விமானச் சேவை, குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது.இது போன்ற வளர்ச்சியை இந்தியவிமான துறை காண வேண்டு மென்றால், விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.அவ்வாறு தளர்த்தப்படும்பட்சத்தில், இந்திய விமானத் துறை, வரும், 2021ம் ஆண்டு, 10 கோடி சர்வதேச விமான சேவைகளை மேற்கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி பெறும் அல்லது, தற்போதையநிலையே நீடித்தால், வரும், 2023ம் ஆண்டு, இந்தியாவின் சர்வதேச விமானச்சேவையின் எண்ணிக்கை, 9.60 கோடி என்ற அளவிற்கு இருக்கும்.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் சர்வதேச விமான சேவை, 5 கோடியாக உயரும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சர்வதேச விமானச் சேவைக்கான விதிமுறைகளை தளர்த்துவது குறித்து,மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு உள்ள கட்டுபாடுகளால், சர்வதேச அளவில்விமானச் சேவையை மேற்கொள்ள இயலாமல் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|