பதிவு செய்த நாள்
08 அக்2013
15:36
தேயிலை உற்பத்தி ஆகஸ்டு மாதத்தில் 2.23 சதவீதம் அதிகரித்து 15.43 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 15.10 கோடி கிலோவாக இருந்தது. மேற்கு வங்காளத்தில் உற்பத்தி அதிகரித்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.ஆகஸ்டு மாத மொத்த உற்பத்தியில் இந்த இரண்டு மாநிலங்களின் பங்கு 90 சதவீதமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 11.53 சதவீதம் அதிகரித்து 3.86 கோடி கிலோவிலிருந்து 4.30 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் உற்பத்தி 0.9 சதவீதம் அதிகரித்து 9.24 கோடி கிலோவிலிருந்து 9.33 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அதே சமயம் தென்மாநிலங்களில் தேயிலை உற்பத்தி 15.8 சதவீதம் குறைந்து 1.73 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ள போதிலும், நடப்பு ஆண்டில் தேயிலை ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டை போல் 19 கோடி கிலோவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|