பதிவு செய்த நாள்
14 அக்2013
14:08
இந்தியாவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உலக அளவில், 240 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 150 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே இணையம் செல்கின்றனர். இந்தியாவில், இணையத்தைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 16 கோடியைத் தாண்டிவிட்டது. உலகத்தின் பிற நாடுகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான். ஆனால், மிகக் குறுகிய காலத்தில், மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில், 8 கோடியே 60 லட்சத்தினை எட்டியுள்ளது. ஏறத்தாழ, இணையப் பயனாளர்களில், பாதிக்கும் மேலானவர்கள், மொபைல் போன்களை, இதற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்னொரு ஆர்வமூட்டும் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், 3ஜி இணைப்பு பெற்ற மொபைல் போன்களின் எண்ணிக்கை, ஆச்சரியப்படத்தக்க வகையில், 2 கோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில், வயர் வழி இணைய சேவை பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம் பேர் மட்டுமே என்பது வியப்பினை அளிக்கிறது. இதிலிருந்து 3ஜி இணைப்பு மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கு காரணங்களாக மூன்று விஷயங்களைக் கூறலாம். முதலாவதாக, சரியான வாங்கக் கூடிய விலையில், 3ஜி இயங்கக் கூடிய போன்கள் கிடைப்பதாகும்.அடுத்ததாக, எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தத் தக்க வகையில் இணைய டேட்டா இணைப்பு. மூன்றாவதாக, பலமான பயனாளர்கள் இயக்கம்.
இந்தியாவில், 9 சதவீத இணையப் பக்கங்களைப் பார்வையிடுதல் மொபைல் சாதனங்கள் வழியே தான் மேற்கொள்ளப்படுகிறது. அதே போல, கூகுள் தேடல்களில் 40 சதவீதம் மொபைல் போன்களின் வழியேதான் மேற்கொள்ளப்படுகிறது.
பேஸ்புக் சமுதாய இணைய தளத்தினை மாதந்தோறும் தொடர்ந்து பார்வையிடுவோர் எண்ணிக்கை, நூறு கோடியாக உயர்ந்துள்ளது. இவர்களில் 81.9 கோடிப் பேர், மொபைல் வழியாகவே பேஸ்புக் தளத்தைப் பார்வையிடுகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம், மொபைல் வழி இணையத்தினைப் பயன்படுத்துவோரிடமிருந்தே பெறப்படுகிறது. இந்தியாவிலும், 30 சதவீதம் பேர், பேஸ்புக்கினை மொபைல் வழி காண்கின்றனர். மேலும், புதிய பதிவுகளில் 30 சதவீதம் பேர், மொபைல் போன்கள் வழியேதான் பதிவு செய்து கொள்கின்றனர். இதிலிருந்து, இந்தியாவில், மொபைல் இணைய வெளியினை, பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவன சேவைகளே பிடித்து வைத்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இணையத் தொடர்பு மேற்கொள்ளும் வசதியுடன், மொபைல் சாதனங்களைக் கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|