பதிவு செய்த நாள்
15 அக்2013
17:06
திருப்பூர்: பருத்தி வரத்து துவங்கியுள்ளதையடுத்து, கேண்டி 44 ஆயிரம் ரூபாயாக பஞ்சு விலை குறைந்துள்ளது. இதனால், நூல் விலையை குறைக்க நூற்பாலைகள் திட்டமிட்டு வருகின்றன.
பருத்தி அறுவடையாகும், அக்., - ஏப்., வரையிலான மாதங்கள் பருத்தி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. கடந்த பருத்தி ஆண்டில் (2012-13), ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால், சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் பருத்தி பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால், ஏப்., இறுதி முதல், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்து, கேண்டி 54,000 ரூபாயை தொட்டது. இதை காரணம் காட்டி, தமிழக நூற்பாலைகள், நூல் விலையை படிப்படியாக கிலோவுக்கு 30 ரூபாய் வரை உயர்த்தின. தற்போது, பருத்தி பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு 10 சதவீதம் வரி விதித்துள்ளது; நூல் ஏற்றுமதிக்கு வழங்கிய சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, புதிய சீசன் துவங்கியுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து பருத்தி வரத்து துவங்கியுள்ளது. கடந்த மாத இறுதிவரை, ஒரு கேண்டி 48,000 ரூபாயாக இருந்த பருத்தி பஞ்சு விலை, 44,000 ரூபாயாக குறைந்துள்ளது. புதிய சீசன் துவக்கம், பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு, வங்கதேசம், சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்புகளால், உள்நாட்டில் பஞ்சு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், திருப்பூரில் உள்ள நூற்பாலைகள், நூல் விலையை கிலோவுக்கு 7 முதல் 10 ரூபாய் வரை குறைக்க திட்டமிட்டு வருகின்றன.
நூல் வியாபாரிகள் கூறுகையில், "சீசன் துவங்கியுள்ளதால், குஜராத், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து புதிய பருத்தி வரத்து துவங்கியுள்ளது. இதனால், அபரிமிதமாக உயர்ந் திருந்த பஞ்சு விலை, குறைந்து கொண்டே வருகிறது. பஞ்சு விலை குறைவால், கடந்த 1ல் தமிழக நூற்பாலைகள் கிலோவுக்கு 5 ரூபாய் நூல் விலையை குறைத்தன. தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை 44,000 ரூபாயாக உள்ளது. இதனால், சில நூற்பாலைகள் விலையில் சலுகை வழங்கி வருகின்றன. மற்ற நூற்பாலைகள், ஓரிரு நாட்களில் கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைக்க திட்டமிட்டு வருகின்றன,' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|