தங்கம் விலை சிறிதளவு உயர்ந்ததுதங்கம் விலை சிறிதளவு உயர்ந்தது ... சிங்கப்பூருக்கு அரிசி  ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் ...
பருத்தி வரத்து துவங்கியுள்ளதால் நூல் விலை குறைக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2013
17:06

திருப்பூர்: பருத்தி வரத்து துவங்கியுள்ளதையடுத்து, கேண்டி 44 ஆயிரம் ரூபாயாக பஞ்சு விலை குறைந்துள்ளது. இதனால், நூல் விலையை குறைக்க நூற்பாலைகள் திட்டமிட்டு வருகின்றன.
பருத்தி அறுவடையாகும், அக்., - ஏப்., வரையிலான மாதங்கள் பருத்தி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. கடந்த பருத்தி ஆண்டில் (2012-13), ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால், சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் பருத்தி பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால், ஏப்., இறுதி முதல், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்து, கேண்டி 54,000 ரூபாயை தொட்டது. இதை காரணம் காட்டி, தமிழக நூற்பாலைகள், நூல் விலையை படிப்படியாக கிலோவுக்கு 30 ரூபாய் வரை உயர்த்தின. தற்போது, பருத்தி பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு 10 சதவீதம் வரி விதித்துள்ளது; நூல் ஏற்றுமதிக்கு வழங்கிய சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, புதிய சீசன் துவங்கியுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து பருத்தி வரத்து துவங்கியுள்ளது. கடந்த மாத இறுதிவரை, ஒரு கேண்டி 48,000 ரூபாயாக இருந்த பருத்தி பஞ்சு விலை, 44,000 ரூபாயாக குறைந்துள்ளது. புதிய சீசன் துவக்கம், பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு, வங்கதேசம், சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்புகளால், உள்நாட்டில் பஞ்சு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், திருப்பூரில் உள்ள நூற்பாலைகள், நூல் விலையை கிலோவுக்கு 7 முதல் 10 ரூபாய் வரை குறைக்க திட்டமிட்டு வருகின்றன.

நூல் வியாபாரிகள் கூறுகையில், "சீசன் துவங்கியுள்ளதால், குஜராத், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து புதிய பருத்தி வரத்து துவங்கியுள்ளது. இதனால், அபரிமிதமாக உயர்ந் திருந்த பஞ்சு விலை, குறைந்து கொண்டே வருகிறது. பஞ்சு விலை குறைவால், கடந்த 1ல் தமிழக நூற்பாலைகள் கிலோவுக்கு 5 ரூபாய் நூல் விலையை குறைத்தன. தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை 44,000 ரூபாயாக உள்ளது. இதனால், சில நூற்பாலைகள் விலையில் சலுகை வழங்கி வருகின்றன. மற்ற நூற்பாலைகள், ஓரிரு நாட்களில் கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைக்க திட்டமிட்டு வருகின்றன,' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)