பதிவு செய்த நாள்
23 அக்2013
12:29
xதிண்டுக்கல்: மல்லிகை ஏற்றுமதிக்கான உற்பத்தி நிறுவனத்தை திண்டுக்கல்லில் துவங்கலாமென தோட்டக்கலைத் துறையினர், அரசுற்கு பரிந்துரை செய்து உள்ளனர். திண்டுக்கல், திருச்சி, மதுரை, ராமநாதபுரத்தில் மல்லிகை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மார்ச்சிலிருந்து ஜூன் வரை மல்லிகை விளைச்சல் அதிகளவில் இருக்கும். அதிக வரத்து காரணமாக விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. இதற்கு அடுத்த கட்டமான அக்டோபரில் இருந்து ஜனவரி வரை மல்லிகை மகசூல் போதுமானதாக இருக்காது. வரத்து குறைவு என்பதால், அதிக விலைக்கு விற்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு மல்லிகை சாகுபடியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மல்லிகைக்கான தேவை அதிக அளவில் உள்ளது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் வெளிநாடுகளுக்கு மல்லிகை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உற்பத்தி நிறுவனங்களை துவக்குவதற்கான ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில், திண்டுக்கல்லில் உற்பத்தி நிறுவனத்தை துவக்கலாம், என தோட்டக்கலைத்துறையினர், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|