பதிவு செய்த நாள்
25 அக்2013
00:53
புதுடில்லி:டாட்டா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து, இந்தியாவில் மேற்கொள்ள உள்ள, விமான போக்குவரத்து சேவை திட்டத்திற்கு, மத்திய அரசு, நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.இதன் வாயிலாக, 4.90 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு மூலதனம்:அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்திற்கு பிறகு, இந்த கூட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயராம் தெரிவித்தார்.இந்தியாவில் விமானச் சேவை மேற்கொள்வதற்காக, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, டாட்டா சியா ஏர்லைன்ஸ் என்ற புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளன.
இப்புதிய நிறுவனத்தில், டாட்டா சன்ஸ், 51 சதவீத பங்கு மூலதனத்தையும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், 49 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டிருக்கும். கடந்த வாரம், இந்த புதிய திட்டத்திற்கு, நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக, இவ்விரு நிறுவனங்களும் விமானச் சேவை மேற்கொள்வதற்காக, 10 கோடி டாலர் முதலீடு மேற்கொள்கின்றன.
இதர அமைப்புகளின் ஒப்புதல் கிடைத்த பிறகு, விமானச் சேவை அடுத்த ஆண்டு முதல் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. டாட்டா குழுமத்திற்கு, ஏற்கனவே விமானச் சேவையில் அனுபவம் உள்ளது. அதாவது, 1932ம் ஆண்டு, ஜே.ஆர்.டி. டாட்டா, டாட்டா – ஏர்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தை துவங்கினார்.
ஏர் – இந்தியா:பின்பு, இந்த நிறுவனம், 1946ம் ஆண்டு, ஏர் – இந்தியா என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1953ம் ஆண்டு, இந்நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது.இதற்கிடையே, இவ்வாண்டு பிப்ரவரி மாதம், டாட்டா நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த ஏர் – ஏசியா நிறுவனத்தின் கூட்டுடன், குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை மேற்கொள்ளும் வகையில், கூட்டு திட்டம் ஒன்றை மேற்கொண்டது.
பின்பு, இந்த நிறுவனத்தில், அருண்பாட்டியாவின் டெலிஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனம் மூன்றாவது பங்குதாரராக சேர்ந்து கொண்டது.இந்த கூட்டு திட்டத்திற்கு, கடந்தாண்டு ஏப்ரல் மாதம், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியது.
அன்னிய நேரடி முதலீடு:நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, கடந்த நிதிஆண்டின் இதே காலத்தை விட, 20 சதவீதம் அதிகரித்து, 590 கோடி டாலரிலிருந்து, 705 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|