பதிவு செய்த நாள்
25 அக்2013
01:05
அயல்நாட்டு வர்த்தகர்கள், இந்திய கோதுமைக்கு மிகக் குறைந்த விலையை
குறிப்பிட்டதால், கோதுமை ஏற்றுமதிக்கான ஒப்பந்தப்புள்ளியை, மத்திய அரசு ரத்து செய்தது.மத்திய அரசு, நடப்பு நிதிஆண்டிற்கு, 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
குறைந்தபட்ச விலை:இதையடுத்து, சென்ற ஜூலை மாதத்தில், ஒரு டன் கோதுமைக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, 300 டாலராக, மத்திய அரசின் முக்கிய அமைச்சரவை குழு நிர்ணயித்தது.பொதுத் துறையை சேர்ந்த, எம்.எம்.டி.சி., பி.இ.சி., எஸ்.டி.சி., ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில், கோதுமை ஏற்றுமதிக்கான ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டன.
நடப்பு அக்டோபர் மாத துவக்கத்தில், திறக்கப்பட்ட இந்த ஒப்பந்தப்புள்ளிகளில், மத்திய அரசு நிர்ணயித்ததை விட, 10 சதவீதம் குறைவாக, அதாவது, ஒரு டன் கோதுமைக்கு,
அதிகபட்சமாக, 269 டாலர் என்ற அளவில்,விலை குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால்,
கோதுமைக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை விட, சர்வதேச சந்தையில் கூடுதல் விலை கிடைக்கும் என்ற அரசின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.இதையடுத்து, கோதுமை ஏற்றுமதிக்கான ஒப்பந்தப்புள்ளியை, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில், 45 லட்சம்டன் கோதுமை ஏற்றுமதி செய்யப் பட்டது.
அப்போது, சர்வதேசச் சந்தையில், ஒரு டன் இந்திய கோதுமைக்கு, சராசரியாக, 305 டாலர் கிடைத்தது.இதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டிற்கு, கோதுமைக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, 300 டாலராக, மத்திய அரசு நிர்ணயித்தது
.
விலை சரிவு:ஆனால், தற்போது, சர்வதேச சந்தையில் கோதுமை வரத்து
அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவடைந்துள்ளது. ஒரு, டன் கோதுமை, 267 டாலருக்கு விற்கப்படுகிறது.இதன் காரணமாகவே, இறக்குமதியாளர்கள், ஒரு டன் கோதுமைக்கு, 269 டாலர் என, குறிப்பிட்டு இருந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டபோது, சிகாகோ வர்த்தக வாரியத்தில், ஒரு டன் கோதுமையின் விலை, 233 டாலராக இருந்தது. இது, நடப்பு அக்டோபர் மாதத்தில், 257 டாலராக உயர்ந்துள்ளது.எனினும், இந்த விலைக்கும், மத்திய அரசு, கோதுமைக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஏற்றுமதி விலைக்கும் இடையே, டன்னுக்கு, 43 டாலர் வித்தியாசம் உள்ளது.இதனால், பன்னாட்டு நிறுவனங்கள், கோதுமை இறக்குமதிக்கு, மிகக் குறைந்த விலையை குறிப்பிட்டுள்ளன என, இந்திய உணவு கழக (எப்.சி.ஐ.,) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அக்டோபர், 1ம் தேதி நிலவரப்படி, எப்.சி.ஐ., ன் கிடங்குகளில், 3.51 கோடி டன் கோதுமை உள்ளது. இது, இருப்பு வைக்க வேண்டிய அளவான, 41 லட்சம் டன்னை விட, எட்டு மடங்கு அதிகமாகும்.இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கோதுமையை பாதுகாப்பாக வைக்க, போதிய கிடங்கு வசதி இல்லாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு, கோதுமை ஏற்றுமதி மூலம் ஓரளவு தீர்வு காண, எப்.சி.ஐ. முயன்றது.
சர்வதேச நிலவரம்:ஆனால், சர்வதேச நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு, கோதுமை ஏற்றுமதி விலையை நிர்ணயித்ததால், அம்முயற்சியும் தடைபட்டு
உள்ளது.அடுத்த வாரம் நடைபெற உள்ள, முக்கிய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், கோதுமை ஏற்றுமதிக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படும் என, தெரிகிறது. இதையடுத்து, அடுத்த மாதம், கோதுமை ஏற்றுமதிக்கு புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
உலக உற்பத்தி:நடப்பாண்டு, பல நாடுகளில் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில், கோதுமை உற்பத்தி, கடந்த ஆண்டை விட, 6.8 சதவீதம் அதிகரித்து, 70.40 கோடி டன்னாக உயரும் என, ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|