பதிவு செய்த நாள்
25 அக்2013
10:09
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.26 புள்ளிகள் குறைந்து 20694.17 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17.55 புள்ளிகள் குறைந்து 6146.80 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று காலையில் துவங்கிய போது ஏற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு, முதன்முறையாக, சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 21,000 புள்ளிகளை கடந்தது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வியாபாரம் சரிவுடன் முடிவடைந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|