பதிவு செய்த நாள்
25 அக்2013
17:09
இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாகும். இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளருமான ஹ்யுண்டாய் மோட்டர், இந்தியா லிமிடெட் (கெச்.எம்.ஐ.எல்.,) அக்டோபர் 17ம் தேதி, தங்களின், 50 லட்சமாவது காரின் வெளியீட்டை, சென்னை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள உற்பத்திக் கூடத்தில் கொண்டாடியது. கடந்த 15 ஆண்டுகளாக, உலகத்தரமான வாகனங்களை, இந்திய சந்தைக்கு அளித்து வரும், ஹ்யுண்டாய் தங்களின் ப்ராண்ட் அம்பாசிடர், இந்தி நடிகர் ஷாரூக்கானுடன் தங்களுக்குள்ள, 15 ஆண்டு தொடர்பையும், அன்று கொண்டாடியது குறிப்பிடத்தக்கதாகும்.தமிழக அரசுக்கு, 4 சதவீத ஜி.டி.பி.,யை ஈட்டித் தந்ததுடன், ஏற்றுமதி சந்தையில், தங்களின் பங்காக, 46 சதவீதத்தையும் பயணிகள் கார் சந்தையில், 20.3 சதவீத பங்கையும் அளித்து, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது ஹயுண்டாய். கெ.எம்.ஐ.எல்., இன் ஒரு பகுதியான ஹ்யுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன், தங்களின் பங்குதாரர்களின் சார்பில், 10 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற, "கோ க்ரீன்' திட்டத்தின் படி, இதுவரை இரண்டு லட்சம் கன்றுகளை நட்டுள்ளது.
இவ்விழாவில், கெச்.எம்.ஐ.எல். நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியான, பி.எஸ்., சியோ பேசுகையில், இந்திய சந்தையில் ஹ்யுண்டாயின் பயணத்தில், 50 லட்சமாவது காரை வெளியிட்டுள்ளது முக்கிய மைல்கல்லாகும். இத்தருணத்தில், எங்களின் வாடிக்கையாளர், நிறுவன கூட்டு வைத்துள்ளார்கள், பணியாளர்கள், டீலர்கள் மற்றும் சப்ளையர்களின் ஆதரவிற்கு நன்றிக் கூறிக் கொள்கிறேன். உலகத்தரமான வாகனங்களையும் வழங்குவதும், முதலீடுகளும் மேலும் தொடர நாங்கள் முயலுவோம் என்று கூறினார்.
ஹ்யுண்டாய் நிறுவனம் நேரடியாக, 9,500பேருக்கும், விற்பனையாளர் டீலர் சேவை போன்றவை மூலம் கிட்டத்தட்ட, 1,27,800 பேருக்கும் வேலை வாய்ப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஹ்யுண்டாய் ஏ2 பிரிவில் இயான், சான்ட்ரோ ஐ10, க்ராண்ட், ஐ20, ஏ3 பிரிவில் வெர்னா, ஏ4 பிரிவில் எலான்ட்ரா, ஏ5 பிரிவில், சொனேட்டா மற்றும் எஸ்.யு.வி., பிரிவில் சாண்ட்டா பீ போன்று கார்களை இதுவரை வெளியிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|