பதிவு செய்த நாள்
29 அக்2013
04:26
மேட்டூர்: மேட்டூரில், தீபாவளி இனிப்பு விற்பனை மந்தமாக உள்ளதாக, விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம், மேட்டூரில் ஏராளமான திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, வியாபாரிகள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து, மேட்டூரில், தீபாவளி இனிப்புகளை தயாரிக்கும், ராஜூ கூறியதாவது:கடந்த ஆண்டு, 1,090 ரூபாயாக இருந்த ஒரு டின், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலை, 1,320 ரூபாயாகவும், 28 ரூபாயாக இருந்த 1 கிலோ சர்க்கரை, 33 ரூபாயாகவும், 58 ரூபாயாக இருந்த தரமான மாவு விலை, 78 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனால், நடப்பாண்டு இனிப்பு விலையை கிலோவுக்கு குறைந்தபட்சம், 30 ரூபாய் உயர்த்தியுள்ளோம்.மொத்தம், 20 வகை இனிப்புகளைக் கொண்ட பெட்டியை, 250 ரூபாய்க்கு விற்கிறோம்.
ஐந்தாண்டுகளுக்கு முன், எங்கள் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம், ஐந்து கிலோ இனிப்புகளை வாங்குவர். சமீபகாலமாக குறைந்த வயதிலேயே ஏராளமானோர் நீரிழிவுநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகபட்சம், 2 கிலோ ஸ்வீட்டுக்கு மேல் வாங்குவதில்லை. ஆரோக்கியம் கருதி, எண்ணெய் பண்டங்களை மக்கள் குறைவாக சாப்பிடுவதால் கார வகைகள் விற்பனையும் சரிந்துள்ளது.கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு விலை உயர்வு மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், இனிப்பு விற்பனை, 30 சதவீதம் குறைந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|