பதிவு செய்த நாள்
29 அக்2013
04:27
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், விரிவாக்க பணிகளுக்காக நிதி திரட்ட, மீண்டும் பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளது.இந்நிறுவனத்தின், 5 சதவீத பங்கு விற்பனை வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.இந்த பங்கு வெளியீட்டிற்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்நிறுவனத்தின் தலைவர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.'பைலின்' புயல் காரணமாக, நடப்பு மாதத்தில், கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டிற்கான, நிலக்கரி உற்பத்தி இலக்கு (48.20 கோடி டன்) எட்டப்படும் என, ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.தற்போது, கோல் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசு, 90 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2010ம் ஆண்டு, மத்திய அரசு, கோல் இந்தியா நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 15,199 கோடி ரூபாயை திரட்டி கொண்டது.நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|