பதிவு செய்த நாள்
29 அக்2013
04:29
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் துவக்க தினமான, திங்கட்கிழமையன்று சுணக்கமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், ‘சென்செக்ஸ்’, 0.55 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. எனினும், அமெரிக்காவின் சலுகை திட்டங்கள் தொடரும் என்ற எதிர்பார்ப்பால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், நுகர்பொருட்கள், ரியல் எஸ்டேட், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 113.24 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,570.28 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,771.36 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,550.64 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.டி.சி., ஸ்டெர்லைட், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், எல் அண்டு டி, விப்ரோ, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்ததன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’, 43.80 புள்ளிகள் சரிவடைந்து, 6,101.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,168.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,094.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|